ஞாயிறு, 28 ஜனவரி, 2024

poomi report book work head part

இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய தெற்காசிய சுனாமிக்கு நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இன்று வரை சரியான விளக்கத்தை கூற இயல வில்லை. ஏனென்றால் தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு கருத்து அறிவியல் உலகில் தற்பொழுது நம்பப் பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக நடத்தப் படுகிறது. அவ்வாறு கண்டங்களானது கடல் தளங்களுடன் நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படும் பொழுது ஒரு கண்டத்தின் கடல் தளமானது கடலுக்கு அடியில் அடுத்த கண்டத்திற்கு அடியில் உரசிய படி நகர்ந்து செல்வதாகவும் அதனால் கடுமையான நிலா அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன் ,அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் படுவதாகவும் அதனால் சுனாமி அலைகள் உருவாகுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது . எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் ,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமிக்கு, நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் 01.10.2005 அன்று முதலில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி சென்றதால்தான் சுனாமி ஏற்பட்டது என்று டாக்டர் பெஞ்சமின் பாங் சோ'' என்ற ஆராய்ச்சியாளர் ஒரு விளக்கத்தை தெரிவித்து இருக்கிறார். (The devastating mega thrust earthquake occurred as a result of the India and Burma plates coming together) ஆனால் ,அதே நாசா 2005 ஆம் ஆண்டு ஜுலை மாதம் வெளியிட்ட இரண்டாவது அறிவிப்பில், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது நகர்ந்து, இந்தோனேசியாத் தீவுகளுக்கு அடியில் உரசியபடி சென்றதால்தான் தெற்காசிய சுனாமி, ஏற்பட்டது ( Both the earthquake and uplift were caused by the subduction of the Australia plate underneath the sunda plate…)என்று அடிப்படை ஆதாரமின்றி, முன்னுக்குப் பின் முரணாக, இரண்டு உறுதி படுத்தப் படாத விளக்கங்களைத் தெரிவித்து இருக்கிறார்கள். இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று நாசாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு தெரிய வில்லை.எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன?குறிப்பாகக் கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது, அந்தப் பகுதியில் இருந்த 'சிமிழு' என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது, கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதே சிமிழு தீவில், 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகளானது,எரிமலைகளைச் சுற்றிலும் உருவாகி இருப்பதை, எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள, நான்கு எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை, பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளைச் சுற்றிலும், வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு, அந்த எரிமலைகளானது, சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, அந்த எரிமலைகளைச் சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும், பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு, சில சென்டி மீட்டர் அளவுக்கு, உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது, என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.அதாவது குமுறும் எரிமலைகளில் சுற்றிலும் மேடுபள்ள வளையங்களானதுஉருவாகி இருக்கிறது, என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர்.எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று, பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே, தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகிறது.இவ்வாறு நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று, பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதைப் போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதைத் தற்செயலானது என்று கருத இயலாது. ஏனென்றால் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவில் 26.12.2004 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்குக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட,சரியான விளக்கத்தை கூற இயலாததை போலவே , வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும், ஹைத்தி தீவில், 12.1.2010 அன்று, சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு கூட, கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட ,சரியான விளக்கத்தை கூற இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில், வடக்கு தெற்கு திசைகளை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தொடர்ச்சியாக உருவாகி இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதன் அடிப்படையில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.அத்துடன் அந்த கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் யூரேசியக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது தென் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இவ்வாறு தனித்த தனிக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமும் தென் அமெரிக்கக் கண்டமும் முறையே வடக்கு மற்றும் வட மேற்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் நாசா வெளியிட்ட '' உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிககள் பதிவாகி இருக்க வில்லை. இதனால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், எல்லையை வரையறை செய்ய முடிய வில்லை.எனவே வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடைப் பட்ட கடல் தரைப் பகுதியானது, ''வரையறை செய்யாத எல்லை பகுதி'' ( UNDEFINMED BOUNDARY )என்றும் அழைக்கப் படுகிறது.இதன் மூலம் அட்லாண்டிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக இரண்டாவது முறையாகவும் ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அட்லாண்டிக் கடல் தளம் நிலையாக இருப்பதற்கு இன்னொரு ஆதாரம். கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் படி அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு தொடர்ந்து வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது. இவ்வாறு அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், வடக்கு தெற்கு திசையை நோக்கி, பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் மத்திய கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு தொடர்ந்து வெப்பமான பாறைக் குழம்பு, வெளி வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருந்தால், அட்லாண்டிக் கடலின் மதியப் பகுதியில் இருக்கும், கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் இருக்கும், பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும், கடல் தளப் பாறைகளின் தொன்மையானது, அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, இரண்டாவது ஆதாரம் மூலமாகவும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். குறிப்பாகக் கண்டத் தட்டு நகர்ச்சி கொள்கையின் படி, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு, தொடர்ந்து மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, கிழக்கு மற்றும் மேற்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன், வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.இந்த நிலையில் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் பெரிய இடை வெளி இருந்ததாகவும், அப்பொழுது பசிபிக் கடல் பகுதியில் குறிப்பாகத் தற்பொழுது காலபாகஸ் எரிமலைத் தீவுக் கூட்டம் இருக்கும் இடத்தில், எரிமலை செயல் பாட்டால், கரீபியன் தீவுக் கூட்ட மானது, உருவான பிறகு ,ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்ததாகவும், தற்பொழுது கரீபியன் பாறைத் தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் ஒரு கருத்து முன் மொழியப் பட்டு இருக்கிறது.இந்த நிலையில், மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லாண்டிக் கடல் தளமானது,கரீபியன் தீவுகளுக்கு அடியில் சென்று, உருகிப் பாறைக் குழம்பாகி, மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து, கடல் தளத்தை பொத்துக் கொண்டு,கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்கு திசையில், வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கும் எரிமலைத் தீவுகளாக உருவாகி இருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகிறார்கள்.இந்தக் கருத்தானது 'பசிபிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது,குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,பல சிறிய எரிமலைத் தீவுகள் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கின்றன.இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு கிழக்குப் பகுதியில்,பல சிறிய எரிமலைத் தீவுகள் வடக்கு தெற்கு திசையை நோக்கி உருவாகி இருப்பதற்கு ஒரு விளக்கம் கூறப் படுகிறது.அதாவது,கரீபியன் பாறைத் தட்டு கிழக்கு திசையை நோக்கி நகரும் பொழுது,மேற்கு திசையை நோக்கி நகரும் அட்லான்டிக் கடல் தளமானது கரீபியன் தீவுக் கூட்டத்திற்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாகி ,மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல் தளத்தை பொத்துக் கொண்டு உயர்ந்து கடல் தளத்துக்கு மேலே வடக்கு தெற்கு திசையை நோக்கி எரிமலைகள் உருவாகி இருப்பதாக விளக்கம் கூறப் படுகிறது.ஆனால் இந்தக் கருத்தில் உள்ள முக்கியமான பிரச்சினை என்ன வென்றால், தற்பொழுது இரண்டு அமெரிக்கக் கண்டங்களையும், பாலம் போன்று இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி மத்திய அமெரிக்க நிலப் பகுதியைக் கடந்து, கரீபியன் பாறைத் தட்டு, பசிபிக் கடல் பகுதியில் இருந்து, தற்பொழுது இருக்கும் அட்லாண்டிக் கடல் பகுதிக்கு வந்தது என்ற கேள்வி எழுந்தது. அதனால் ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, உருவாகி இருக்க வில்லை என்றும், அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரீபியன் பாறைத் தட்டு நுழைந்த பிறகே , மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது, பூமிக்குள் இருந்து மேல் நோக்கி உயர்ந்து இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் யூகித்தனர். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. வேறு சில ஆராய்ச்சியாளர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்டிக் பெருங் கடல் பகுதியில், எரிமலை செயல் பாட்டால் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்திருக்கலாம், என்றும் ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர்.இந்த விளக்கமானது 'அட்லாண்டிக் கடல் மாதிரி' என்று அழைக்கப் படுகிறது.முக்கியமாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது, எரிமலைத் தீவுக் கூட்டம் ஆகும்.அதிலும் குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டமானது, தலை கீழாகக் கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும், நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக விளக்கம் கூறப் படுகிறது.உதாரணமாக பசிபிக் கடல் தரையின் மேல், ஹவாய் எரிமலைத் தீவுகளானது பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.இதன் அடிப்படையில்,பசிபிக் கடல் தளமானது, தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்குள் இருந்து ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதால் ,பசிபிக் கடல் தளத்தின் மேல், தென் கிழக்கு திசையில் இருந்து, வட மேற்கு திசையை நோக்கி, ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருக்கிறது என்று விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கம் சரி என்றால் அதே பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் மற்ற எரிமலைத் தீவுகளும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அவ்வாறு இல்லாமல் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் லைன் எரிமலைத் தீவு வரிசையும்,லூயிஸ் வில்லி எரிமலை தீவு வரிசையும் ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையாக உருவாகாமல் ,ஹவாய் எரிமலைத் தீவு வரிசைக்கு இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாக்கி இருக்கிறது. இவ்வாறு பசிபிக் கடல் தரையின் மேல் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாக்கி இருக்கும் எரிமலைத் தீவு வரிசைகள் மூலமாகவும் பசிபிக் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக்கு கூட்டத்தை உருவாக்கிய எரிமலைப் பிழம்பானது மறுபடியும் பூமிக்குள் மூழ்கி இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் ஒரு விளக்கத்தைக் கூறினார்கள்.ஆனால் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் இன்றும் கூட எரிமலை சீற்றங்கள் ஏற்படுவது இந்த விளக்கத்திற்கு முரணாக இருக்கிறது. இ ந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதன் அடிப்படையில் அமெரிக்கக் கண்டங்களும், கரீபியன் தீவுக் கூட்டமும் தற்பொழுது இருக்கும் இடங்களிலேயே எப்பொழுதும் இருந்திருப்பது, ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. அத்துடன் டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து இருப்பதும், அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில், கரீபியன் தீவுகள் தொடர்ச்சியாக இருந்திருப்பதுடன், அதன் வழியாக டைனோசர்களின் போக்கு வரத்து நடை பெற்று இருப்பதும், ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கியூபா தீவில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் மூலம் ,கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்த நீரால் உருவானது என்பதும் நிரூபணம் ஆகிறது. அதாவது,கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பும் ஆராய்ச்சியாளர்களுக்கு, உண்மையில்,கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகித் தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்தது, தற்பொழுது எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற கேள்விக்கு இன்று வரை, உறுதிப் படுத்தப் பட்ட ஒரு விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. அதனால் அமெரிக்கப் புவியியல் வல்லுநர்கள் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் ,ஒரு ' ' 'த ந் தி ர மா ன ' விளக்கத்தை தெரிவித்து இருக்கின்றனர். அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால், பின்னர் அதன் தோற்றம் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவானது என்ற கேள்விக்கு விளக்கம் கூற வேண்டும், என்பதால் அதனைத் தவிர்க்கும் பொருட்டு,கரீபியன் தீவுக் கூட்டமானது,குறிப்பாக இந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,கரீபியன் பாறைத் தட்டானது, வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்ற விளக்கத்தை கூறி இருக்கின்றனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். அவ்வாறு இல்லாமல் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கிறது என்ற கருத்துக்கும் கூட மேற்சொன்ன அதே விளக்கத்தை பொருத்திக் கொள்ள முடியும்.ஆக கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே எப்படி உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை கூறத் தெரியாத நிலையில்,அமெரிக்கப் ஆராய்ச்சியாளர்கள் மிகவும் சாமர்த்தியமாக ஒரு விளக்கத்தைக் கூறி தப்பித்து இருக்கின்றனர். சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால். வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையுள்ள தாவரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. அதே போன்று,கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.எனவே நிச்சயம் கரிபியன் தீவுக்கு கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து இருக்க இயலாது. குறிப்பாக அட்லாண்ட்டிக் கடல் பகுதியானது, கண்டங்களின் பிரிவால் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகி விரிவடைந்து நகர்ந்ததால் பெரிதானதாகக் கூறப் படுகிறது.எனவே கரிபியன் தீவுக்கு கூட்டமானது அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாக்கி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு, எரிமலைத் தொடர்கள் நேர்கோட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியிலும் உருவாகி இருக்க வில்லை. என்பதும் தெளிவாகிறது.இந்த நிலையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது, தற்பொழுது இருக்கும் இடத்திலேயே, பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உருவாகி இருந்தால்,அட்லாண்ட்டிக் கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதால்,அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் அட்லாண்ட்டிக் கடல் தளத்தின் மேல் அவ்வாறு பல்லாயிரம் தொலைவுக்கு எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்க வில்லை.ஆனால்,கரீபியன் தீவுக் கூட்டமானது,அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் ,தலை கீழாக கவிழ்த்துப் போட்ட ''ட''வடிவில் அமைந்து இருக்கிறது.இதன் மூலம் அட்லாண்ட்டிக் கடல் தளமானது நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இந்த நிலையில், கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றே தெரியாத நிலையில்தான், அதாவது நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தந்த ஒப்புதல் வாக்கு மூலம் போன்று, ''கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரியாத நிலையிலேயே'' கரிபியன் பாறைத் தட்டும், வட அமெரிக்கக் கண்டத் தட்டும் நகர்ந்தால், இந்த இரண்டு பாறைத் தட்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட உரசலால், ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டது, என்று அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில், உறுதி படுத்தப் படாத விளக்கத்தை, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.சுருக்கமாகக் கூற வேண்டும் என்றால் ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் சரியான விளக்கத்தை,USGS என்று அழைக்கப் படும், அமெரிக்கப் புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் உறுதி படுத்தப் பட்ட ,சரியான விளக்கத்தை கூற இயல வில்லை.எனவே, ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.இந்த நிலையில் ஹைத்தி தீவில் கடந்த 12.01.2010 அன்று சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹைத்தி தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, ஆதார பூர்வமாக நிரூபண மாகியுள்ளது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. மேலும் கடந்த 06.02 2023 அன்று துருக்கியில் ஏற்பட்ட நில அதிர்ச்சி மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பின்னதிர்வுகள் கூட, துருக்கியில் உள்ள எரிமலை வரிசைக்கு இணையாகவே ஏற்பட்டு இருக்கிறது. எனவே பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை செயல்பாடுகள் காரணமாகவே துருக்கி நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. இதே போன்று கடந்த செப்டம்பர் மாதம் எட்டாம் நாள் ஆப்பிரிக்காவின் வட பகுதியில் உள்ள மொரோக்கோவில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பிறகு, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் உள்ள நிலமானது, இருபது சென்டி மீட்டர் அளவுக்கு, உயர்ந்து இருப்பதை, ஜப்பான் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து அறிவித்து இருக்கின்றனர். குறிப்பாகக் கண்டங்களைச் சுற்றிலும் கடலுக்கு அடியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் நீளத்துக்கு எரிமலைகள் தொடர்ச்சியாக உருவாகி இருப்பதுடன், அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் ,அடிக்கடி எரிமலை சீற்றங்கள் மற்றும் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதன் மூலம், நில அதிர்ச்சிகளுக்கு எரிமலை செயல்பாடே காரணம் என்பதும் நிரூபணமாகிறது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது. அது மட்டுமின்றி கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது, அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன், அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது. இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. இதே போன்று கண்டங்களின் மேலும், கடல் தளத்தின் மேலும், ஒன்றுக்கு கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது குறிப்பாகக் கடல் தளத்துடன் கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருக்கும் பொழுது,பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது, கடல் தளத்தையும் கண்டங்களையும் துளைப்பதால்,கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும், எரிமலைத் தொடர்கள் உருவாகுவதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இந்த விளக்கம் உண்மையென்றால்,கடல் தளத்தின் மேலும்,கண்டங்களின் மேலும், உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எல்லாம்,கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் திசைக்கு இணையாக உருவாகி இருக்க வேண்டும். குறிப்பாக வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படுகிறது.இந்த கருத்து உண்மையென்றால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தை சேர்ந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒரே திசையை நோக்கி ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும். ஆனால் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில், அருகருகே உருவாகி இருக்கும், ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கின்றன. இவ்வாறு, வட அமெரிக்கக் கண்டத்தின் மேல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருக்கும், எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது. அத்துடன் கண்டங்களின் மேல் பரவலகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் நிரூபணம் ஆகிறது.அது மட்டுமின்றி கண்டங்களைச் சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருப்பது, அந்தக் கண்டங்களானது புவித் தரையில் இருந்து மேல் நோக்கி உயர்ந்ததால் அந்தக் கண்டத்தை சுற்றி உள்ள தரை பகுதியும் சிறிது உயர்ந்ததால் புவித் தரையில் விரிசல்கள் மற்றும் பிளவுகள் ஏற்பட்டதுடன், அதன் வழியாக பூமிக்குள் இருந்து பாறைக் குழம்பானது, மேற்பகுதிக்கு வெளிவந்து எரிமலைகளாக உருவாகி இருப்பதும் நிரூபணம் ஆகிறது.இதன் காரணமாகவே ஆப்பிரிக்கக் கண்டத்தை சுற்றிலும் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடரானது, ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடிவத்திலேயே இருப்பதும் குறிப்பிடத் தக்கது. குறிப்பாக பசிபிக் கடலை சுற்றி இருக்கும் கண்டங்கள் மற்றும் தீவுகளை ஒட்டி கடல் தரையில் பிளவுகள் என்று அழைக்கப் படும் அகழிகள் உருவாகி இருகின்றன. இதற்கு அந்தத் தீவுகளுக்கு அடியில் கடல் தளங்கள் நகர்ந்து செல்வதால் அப்பகுதியில் அகழிகள் என்று அழைக்கப் படும் கடல் தரைப் பள்ளங்கள் உருவாகி இருப்பதாகவும் நம்பப் படுகிறது.உண்மையில் வளைவான கடல் பரப்பில் இருந்து கண்டங்கள் நேராக மேல் நோக்கி உயர்ந்ததால்தான் கடல் தரையில் இது போன்ற பிளவுகள் ஏற்படுகின்றன. ஆனால் கண்டத் தட்டு கொள்கையின் படி கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்ததாகவும் பின்னர் கண்டங்கள் பிளவு பட்டு பிரிந்ததாகவும் அதற்கு கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி விலகிப் பிரிந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த நிலையில் கடல் தரையானது நிலையாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது பல ஆதாரங்கள் மூலம் நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே டைனோசர்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களில் காணப் படுவதற்கு மேலும் சில ஆதரங்களை சேகரிக்க இணையத்தில் தேடினேன். எனது தேடலில் சில சுவாரஸ்யமான விஷயங்கள் தெரிய வந்தது. தற்பொழுது இருக்கும் பல புவியியல் பிரச்சினைகளுக்கும் விடை தெரிந்தது. நான் இணையதில் புதை படிவங்கள் குறித்த தரவுகளை சேகரித்து மேற்கொண்ட ஆய்வில் இது போன்ற பல சுவாரஸ்யமான புதிர்களுக்கு விடை தெரிந்தது. கண்டங்கள் பற்றிய கருத்துக்கள் உருவான கதை பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல தனிமைத் தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு, குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார். குறிப்பாக செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல தீவுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விலங்கினங்களைக் கண்டு எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று வியப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதாவது டார்வினின் ஆராய்ச்சியானது இன்று வரை தொடர்கிறது. கண்டங்களின் கடற் கரை ஒர பகுதிகள் ஒன்றிக்கொன்று இணையாக இருப்பதற்கும் கடல் பகுதியால் பிரிக்கப் பட்ட கண்டங்களின் ஒரே இன வகை விலங்கினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும் காரணம் என்ன? ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு திருத்தமான உலக வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அதில் ஒரு வினோதமான விஷயம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்ற வடிவில் அமைந்து இருந்தது புதிராக இருந்தது. குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஒர பகுதிக்கு இணையான வடிவில் இருந்தது.இது மேட்சிங் கோஸ்ட் லைன் என்று அழைக்கப் படுகிறது.இந்த நிலையில் அந்த வரை படத்தை தயாரித்த ஆபிரகாம் ஆர்டெல்லியஸ் அந்தக் கண்டங்களானது இடம் பெயர்ந்து நகர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப்பு படியாக பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும் அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக டார்வின் பீகிள் கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுது கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகு அந்தக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் பல பத்தடிகள் உயர்ந்து இருப்பதுடன் அதன் மேல் கடல் பாசிகள் தாவரங்கள் இருப்பதைக் கண்டார்.அதன் அடிப்படையில் கண்டங்கலின் பகுதிகள் உயர்ந்து இருப்பது குறித்து சிந்தித்தார். பின்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்த ஆண்டிஸ் மலையின் மேல் கடல் சிப்பிகள் புதை படிவங்களையும் கண்டார். அந்த மலையும் உயர்ந்து இருப்பது குறித்து யோசனையாக இருந்தார்.அதன் பிறகு கண்டங்களின் சில பகுதிகள் உயரும் பொழுது கடல் தரையானது தாழ்வடைவதாகவும் அதனால் எரிமலைகள் மூழ்குவதாகவும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.இவ்வாறு கடல் தளம் தாழ்வடைவதால் அதில் இருக்கும் எரிமலைகள் மூழ்குவதாகவும் அப்பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் பவளங்கள் வளர்வதால் பசிபிக் கடலில் வளையவடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதாகவும் டார்வின் நம்பினார். இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயரை சூட்டினார். அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார். ஐடென்டிக்கள் பாசில்ஸ். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார். மாறாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் காட்சிதமாகப் பொருந்த வில்லை.ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒர பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்து பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருது குறித்து ஆராய்ச்சி செய்தபொழுது விரிவடையும் பூமி கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டது தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அளிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார்.அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார். இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர் டேனியல் புரோஸ்ட், நில அதிர்ச்சி அலைகள் பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக்கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக்க கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பனி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார் அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன் அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரைபடத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது. குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. எனது யூரேக்கா கணம் இந்த நிலையில் நான் ஒரு நாள் தற்செயலாக நேஷனல் ஜியாகிராபிக் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப் பட்டு இருந்த புதை படிவங்கள் குறித்த கட்டுரையை படித்த பொழுது எனக்கு ஒரு புதிய கருத்து உருவானது. குறிப்பாக அந்தப் பத்திரிக்கையில் ஒரு மலையின் மேல் இரண்டு பேர் நின்ற நிலையில் கையில் மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.குறிப்பாக அவர்கள் இருப்பதும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் கடல் தரையின் மேல்; வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் 220 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதை படித்ததும் எனக்கு அந்த மலை மட்டுமின்றி அந்த மழைப் பிரதேசம் முழுவதுமே கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதாகத் தோன்றியது.அப்பொழுதே நான் ஒரு புதிய விஷத்தை கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன்.அடுத்த பக்கத்திலேயே சீனாவின் உள் நாடு ,மாலிக் பிரதேசத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருக்கும் படமும் வெளியாகி இருந்தது.உடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் குறித்து இணையத்தில் தகவல் சேகரித்தேன்.அப்பொழுது வட அமெரிக்காவில் உள்ள ஐம்பது மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.உடனே கைக்கு கணங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து நேராக மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது. இந்த நிலையில் நான் சுனாமி குறித்த ஆய்வில் ஈடுபட்ட பொழுது, தெற்காசிய சுனாமிக்கு நாசா முன்னுக்குப் பின் முரணாக இரண்டு வெவ்வேறு விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதைக் கண்டு உண்மையை அறிவதற்காக எரிமலைப் பகுதிகளில் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்கள் மற்றும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடங்களை ஆய்வு செய்ததில் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் பூமிக்கு அடியில் எரிமலைகளை வெடித்ததாலேயே நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்தது அதே போன்று வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறித்தும் தெரிய வந்தது. கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறித்தும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால் துருவங்களில் பணிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன் பூமியானது கடல் மட்ட உயர்வால் மூழ்கிக் கொன்டு இருப்பதும்,பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. அத்துடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது கண்டங்களின் மேல் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும்,தெரிய வந்தது.அதே போன்று டைனோசர்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்களானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டதும் தெரிய வந்தது.இவ்வாறு கண்டங்கள் உயர்ந்து கொண்டு இருப்பதன் மூலமாகவும் அதே போன்று கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பதன் மூலமாகவும் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவு உள்பட மத்திய தரைக்கு கடல் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிந்தவங்கள் மூலம் கடல் மட்ட உயர்வானது கண்டங்கள் உயரும் வேகத்தை விட அதிகமாக இருப்பதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது போன்று நான் மேற்கொண்ட ஆய்வில் பல புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன். புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். 00000000000000 ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்கள். தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. பூமியின் சுருக்கமான வ்சரலாறு. இதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரல் என்று அழைக்கப் படும் பனை மாற உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் கரைந்தது துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பாட்டுக்கு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லா ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக கண்டங்களானது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாடியிரம் ஆதி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. நீர் யானையின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் அவைகளால் நீரின் மேற்பரப்பில் நீந்த இயலாது. குறிப்பாக அவைகளின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது. ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது 00000000999000000000000000000000 ஒரே வரியில் உண்மையை வெளிப் படுத்தி இருக்கிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவு பகுதியிலும் அதே போன்று வட அமெரிக்க்கா மற்றும் தென் அமெரிக்க்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹய்த்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிக்கு அடிப்படை ஆதாரமில்லாத காரணத்தால் அமெரிக்காவின் முன்னணி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த பேரிடர்கள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 ooooooooooooooo சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம். கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது. இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது. கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு, உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம். oooooooooooooo ஆறு முக்கிய ஆதாரங்கள் மூலம் எனது கண்டு பிடிப்பு நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் தளங்களும் கண்டங்களும் நிலையாக இருக்கிறது என்றும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களானது ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா போன்ற தீவுக்கு கண்டங்களுக்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததாலும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்தாலுமே இடம் பெயர்ந்து இருக்கின்றன என்று நான் உறுதியாகக் கூறுவதற்கு முக்கியமான ஆறு ஆதாரங்களை இங்கு குறிப்பிடுகிறேன். 1- வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எல்லை பகுதியை வரையறை செய்ய இயலாத நிலையில் அந்தப் பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை பகுதி என்று அழைக்கப் படுகிறது.இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 2- இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுக்கிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் அந்த கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் பூமி உருவான காலத்தில் இருந்தே அந்த எரிமலைத் தொடர்பகுதியில் புதிய கடல் தளம் உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து இருக்க வில்லை என்பதுடன் கடல் தரையானது நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 3- கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பெய்யு இருப்பதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இந்த நிலையில் கடல் தரையின் மேல் குறிப்பாக பசிபிக் கடல் தரையின் மேல் வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு பசிபிக் கடல் தளமானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தரைக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கோருவதை போன்று உண்மையில் அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் அந்தக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவான கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருக்க வேண்டும்.ஆனால அவ்வாறு இல்லாமல் கரீபியன் தீவுக்கு கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருக்கிறது.இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கரீபியன் தீவுக் கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தரையானது நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.எனவே கியூபா தீவில் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 4- மேலும் அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிவார பகுதியில் பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரினத்தின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் மூலம் கொதிக்க கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.ஏனென்றால் புதை படிவங்களானது உலர்ந்து உருவாக காற்றும் வெய்யிலும் தேவை. 5- மேலும் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டதை ஒட்டியும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியும் உள்ள கடல் தரையில் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதன் மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் ட்ரைடான் டி குன்கா ,அசோர் மதீரா ஆகிய தீவுகளில் ஐரோப்பாவில் காணப் படும் தாரைவாழ் கதையான பேலியோ பேர்வேசா இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுவதன் மூலமாகவும் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அந்த கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்துக்கு மேலே தொடர்ச்சியாக இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 6-இதே போன்று கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. 000000000000000000000000000000 000000000000000 தற்பொழுது அறிவியல் உலகில் சில தீர்க்கப் படாத பிரச்சினைகள் இருக்கிறது.அதாவது சில புவியியல் நிகழ்வுகளுக்கு கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதால் அந்த நிகழ்வுகளுக்கான காரணம் புரிந்து கொல்லப் பட வில்லை. குறிப்பாக மத்திய தரைக்கு கடலில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய பவளத் திட்டுகள் எப்படி ஆழமான பசிபிக் கடல் பகுதியில் உருவாகியது. அதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய வரி அடுக்கு இரும்புப் படிவுகள் கண்டங்களின் மேல் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? அதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய சுண்ணாம்புப் படிவுகள் கண்டங்களின் மேல் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? நிலத்தின் மேல் உருவாகக் கூடிய உப்புப் படிவுகள் கடலின் ஆழமான பகுதியில் காணப் படுவதற்கு காரணம் என்ன? கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு எரிமலைத் தீவுகளுக்கும் சென்றது எப்படி? இது போன்று பல பிரச்சினைகள் விரிவடையும் பூமி விளக்கத்தின் மூலம் எளிதாக விளக்கம் கூற முடிகிறது. அவற்றை ஒவொன்றாக காணலாம். 000000000000000

சனி, 27 ஜனவரி, 2024

பூமியின் சுருக்கமான வரலாறு.

கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு நகரும் பொழுது கடல் தள பாறைகளுக்கு இடையில் உறாள் ஏற்படுவதாகவும் அதனால் கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும் அடிப்படை ஆதாரம் இல்லாத ஒரு கருத்து அறிவியல் உலகில் தற்பொழுது நம்பப் பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாடமாக நடத்தப் படுகிறது. கண்டத் தட்டு நகர்ச்சி என்று அழைக்கப் படும் இந்தக் கருத்தின் படி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் நிலையில்இந்தக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவுப் பகுதியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு நாசா ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க வில்லை. அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தள பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுப் பகுதியில் உள்ள ஹைத்தி தீவில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் ஆய்வு மையத்தைச் ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைத் தெரிவிக்க வில்லை. இந்த நிலையில் குமுறும் எரிமலைகல் சில சென்டி மீட்டர் உயர்ந்து இறங்குவதால் அந்த எரிமலைகளை சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளதுடன், அதே போன்ற தரை மட்ட மாறுபாடுகளானது சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையங்களை சுற்றிலும் ஏற்பட்டு இருப்பதும் பூமிக்கு அடியில் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ,பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே சுமத்ரா மற்றும் ஹைத்தி தீவுகளில் நில அதிர்ச்சிகளும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பதும் ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் கண்டத் தட்டு கொள்கையின் படி கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு முன் ஒரு காலத்தில் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இருந்ததாகவும் பின்னர் கண்டங்கள் பிளவு பட்டு பிரிந்ததாகவும் அதற்கு கண்டங்களுக்கு இடையில் புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி விலகிப் பிரிந்து கொண்டு இருப்பதே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. எனவே டைனோசர்களின் புதை படங்கள் பல்வேறு கண்டங்களில் இருப்பதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காக நான் இணையதில் புதை படிவங்கள் குறித்த தரவுகளை சேகரித்து மேற்கொண்ட ஆய்வில் இது போன்ற பல சுவாரஸ்யமான புதிர்களுக்கு விடை தெரிந்தது. கண்டங்கள் பற்றிய கருத்துக்கள் உருவான கதை பதினாறாம் நூற்றாண்டு... ஆல்ப்ஸ் மலையைக் கடந்து இத்தாலிக்கு வந்த வியாபாரிகள் லியோனார்டோ டா வின்சியை சந்தித்து வரும் வழியில் அவர்கள் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்களைக் கண்டதாக கூறினார்கள். அதைக் கேட்ட டாவின்சி அப்படி என்றால் இந்த இடம் முன் ஒரு காலத்தில் கடலாக இருந்திருக்க வேண்டும் என்று கூறினார். மற்ற படி கடல் மலையின் மேல் இருந்து தாழ்வடைந்ததா அல்லது மலை கடலுக்குள் இருந்து உயர்ந்ததா என்றெல்லாம் அவர் தெரிவிக்க இயலவில்லை. ஏனென்றால் அவர் காலத்தில் மிகவும் புதை படிவங்கள் குறித்த தகவல்கள் மிகவும் குறைவு. பத்தொன்பதாம் நூற்றாண்டு... பீகிள் என்ற கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட சார்லஸ் டார்வின் பல தனிமைத் தீவுகளில் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களைக் கண்டு, குறிப்பாக தவளைகள் மண்புழுக்கள் மற்றும் நத்தைகள் எப்படி இந்த இந்தத் தனிமையான தீவுகளுக்கு வந்திருக்குமென்று வியந்தார். குறிப்பாக செஷல்ஸ் தீவில் தவளைகள் இருப்பது குறித்தும் தகித்தி தீவில் மண்புழுக்கள் இருப்பது குறித்தும் டார்வின் வியப்பு அடைந்தார். அவருக்குப் பிறகு பல ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து பல தீவுகளுக்கு சென்று அங்கு இருக்கும் விலங்கினங்களைக் கண்டு எப்படி இந்த விலங்கினங்கள் இந்தத் தனிமைத் தீவுகளுக்கு வந்திருக்கக் கூடும் என்று வியப்பு தெரிவித்து இருக்கின்றனர். அதாவது டார்வினின் ஆராய்ச்சியானது இன்று வரை தொடர்கிறது. மேட்சிங் கோஸ்ட் லைனும் ஐடென்டிக்கள் பாசில்ஸ்களும் . ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஓரளவு திருத்தமான உலக வரைபடம் தயாரிக்கப் பட்ட பொழுது அதில் ஒரு வினோதமான விஷயம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதைப் போன்ற வடிவில் அமைந்து இருந்தது புதிராக இருந்தது. குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டத்தின் கிழக்கு ஒர பகுதியானது ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்கு ஒர பகுதிக்கு இணையான வடிவில் இருந்தது.இது மேட்சிங் கோஸ்ட் லைன் என்று அழைக்கப் படுகிறது.இந்த நிலையில் அந்த வரை படத்தை தயாரித்த ஆபிரகாம் ஆர்டெல்லியஸ் அந்தக் கண்டங்களானது இடம் பெயர்ந்து நகர்ந்து இருக்க வேண்டும் என்ற கருத்தை வெளியிட்டார். இது குறித்து 1620 ஆம் ஆண்டு,ஆங்கில தத்துவ ஆசிரியரான பிரான்சிஸ் பேக்கன் இது ஆச்சரிய மூட்டும் விஷயத்திற்கும் மேலான ஒன்று ஆனால் அது என்னவென்பது புதிராக இருக்கிறது என்று கூறினார். இது குறித்த விவாதங்களானது படிப்பு படியாக பூமியானது விரிவடைந்து கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் ,பூமியானது சுருங்கி கொண்டு இருக்கிறது என்ற கருத்துக்கும் வித்திட்டது. அதாவது ஒரு திராட்சைப் பழமானது உலர்ந்து சுருங்கும் பொழுது அதன் மேல் தோலில் சுருக்கங்கள் உருவாகுவதை போன்று பூமியின் மேல் மலைகளும் பள்ளத் தாக்குகளும் உருவாகுகின்றன என்று நம்பப் பட்டது. அதே போன்று கோடிக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியானது சிறிய அளவில் இருந்ததாகவும் அப்பொழுது பூமியின் மேல் கடல் இருந்திருக்க வில்லை என்றும் பின்னர் பூமி விரிவடைந்த பொழுது மேல் ஓடு பிளவு பட்டு பிரிந்ததால் கண்டங்கள் உருவானதாகவும் அத்துடன் கண்டங்களுக்கு இடையில் உருவான பிளவுகளில் கடல் உருவானதாகவும் நம்பப் பட்டது. விஞ்ஞானி சார்லஸ் டார்வின் மற்றும் நிகோலா டெஸ்லா போன்றோர்களும் இந்தக் கருத்தில் ஆர்வம் காட்டினார்கள். குறிப்பாக டார்வின் பீகிள் கப்பலில் ஆராய்ச்சி பயணம் மேற்கொண்ட பொழுது தென் அமெரிக்கக் கண்டத்தை அடைந்த பொழுது கடும் நில அதிர்ச்சி ஏற்பட்டது.அதன் பிறகு அந்தக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு நிலம் பல பத்தடிகள் உயர்ந்து இருப்பதுடன் அதன் மேல் கடல் பாசிகள் தாவரங்கள் இருப்பதைக் கண்டார்.அதன் அடிப்படையில் கண்டங்கலின் பகுதிகள் உயர்ந்து இருப்பது குறித்து சிந்தித்தார். பின்னர் தென் அமெரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்த ஆண்டிஸ் மலையின் மேல் கடல் சிப்பிகள் புதை படிவங்களையும் கண்டார். அந்த மலையும் உயர்ந்து இருப்பது குறித்து யோசனையாக இருந்தார்.அதன் பிறகு கண்டங்களின் சில பகுதிகள் உயரும் பொழுது கடல் தரையானது தாழ்வடைவதாகவும் அதனால் எரிமலைகள் மூழ்குவதாகவும் தனது கருத்தை மாற்றிக் கொண்டார்.இவ்வாறு கடல் தளம் தாழ்வடைவதால் அதில் இருக்கும் எரிமலைகள் மூழ்குவதாகவும் அப்பொழுது அந்த எரிமலையை சுற்றிலும் பவளங்கள் வளர்வதால் பசிபிக் கடலில் வளையவடிவில் பவளத் திட்டுகள் உருவாகி இருப்பதாகவும் டார்வின் நம்பினார். இந்த நிலையில் 1861 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த எட்வார்ட் சூயஸ் என்ற ஆராய்ச்சியாளர் ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் பூமத்திய ரேகைப் பகுதியில் கடல் பகுதி இருந்திருக்க வேண்டும் என்றும் அந்தக் கடலுக்கு டெதிஸ் என்றும் பெயரை சூட்டினார். அதன் பிறகு இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன குளோசோப் டெரிஸ் என்று அழைக்கப் படும் தாவரத்தின் பாகங்களானது தென் பகுதிக் கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில் முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒரே தொடர்ச்சியாக இருந்து இருக்க வேண்டும் என்றும் அதற்குப் பிறகு கண்டத்திற்கு இடைப் பட்ட நிலப் பகுதிகள் உடைந்து கடலுக்குள் மூழ்கி இருக்க வேண்டும் என்று ஒரு விளக்கத்தை தெரிவித்தார்.அந்தத் தென் பெருங் கண்டத்திற்கு கோண்டுவானா என்றும் பெயர் சூட்டினார். ஐடென்டிக்கள் பாசில்ஸ். இந்த நிலையில் ,மார்பர்க் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்து கொண்டு இருந்த ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஆல்பிரட் வெக்னர் ஒரு நாள் கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார்.அந்த புத்தகத்தில் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களில் ஒரே வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிவிக்க பட்டு இருந்தது.அதற்கு முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் கடல் மேல் ஒரு தற்காலிக நிலப் பாலம் இருந்திருக்கலாம் என்று பின்னர் அந்த பாலம் கடலுக்குள் மூழ்கி இருக்கலாம் என்றும் விளக்கம் தெரிவிக்கப் பட்டு இருந்தது. ஆனால் வெக்னர் அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களின் ஒர பகுதிகள் ஒன்றில் ஒன்று பொருந்துவதை போன்று ஒன்றுக்கு கொன்று இணையாக இருப்பது தற்செயலானதாக இருக்காது.என்று நம்பினார். மாறாக முன் ஒரு காலத்தில் இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும் பின்னர் அந்தப் பெருங் கண்டமானது தனித் தனியாகப் பிரிந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்று நம்பினார். அவரின் காலத்தில் இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மூன்று அடி நீளமுள்ள ''மெஸோ சாராஸ்'' என்ற முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் எலும்புப் புதை படிவங்களானது, அட்லாண்டிக் பெருங் கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும், தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்தக் கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து, ஒரே கண்டமாக இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்திருக்க வேண்டும் என்றும் வெக்னர் ஒரு விளக்கத்தைக் கூறினார். இதே போன்று ,கடுங் குளிர் நிலவும் பனிப் பிரதேசமான ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும்,''ஸ்வால்பார்ட்'' என்ற தீவில்,வெப்ப மண்டலக் கால நிலையில் வளரக் கூடிய ''கள்ளி'' வகைத் தாவரத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது. அதன் அடிப்படையில், தற்பொழுது ஆர்க்டிக் வளையப் பகுதிக்குள் அமைந்து இருக்கும் அந்த தீவானது, முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய, பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்திருக்க வேண்டும் என்றும், அதன் பிறகு அந்த தீவானது, வடக்கு திசையில் நகர்ந்து, ஆர்க்டிக் பகுதிக்குள் வந்து சேர்ந்து இருக்க வேண்டும் என்றும், வெக்னர் விளக்கம் கூறினார். அத்துடன் ஒத்த கால நிலையில்,வாழக் கூடிய, வளரக் கூடிய, தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு,உலக வரை படத்தை வெட்டியும் ஒட்டியும் மாற்றி அமைத்தார். அதன் அடிப்படையில் ,''இருபத்தி ஐந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து, ஒரு பெரிய கண்டமாக இருந்ததாகவும்,அந்த ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு ‘பாஞ்சியா’ என்றும் பெயர் சூட்டினார்.அந்தப் பாஞ்சியா கண்டத்தை சுற்றிலும் 'பாந்தலாசா' என்ற ஆழம் குறைந்த கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,''பதினைந்து கோடி'' ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியா பெருங் கண்டமானது, இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா ,கோண்டுவானா என்ற இரண்டு பெருங் கண்டங்களாக உருவாகி,முறையே வடக்கு மற்றும் தெற்கு திசைகளை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், பூமத்திய ரேகைப் பகுதியில், ''டெதிஸ்'' என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார். அதன் பிறகு,பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட பகுதி லாரேசியாக் கண்டமானது, மறுபடியும் இரண்டாகப் பிரிந்ததால்,வட அமெரிக்கா மற்றும் யுரேசியா ஆகிய இரண்டு கண்டங்கள் உருவாகி,முறையே மேற்கு மற்றும் கிழக்கு, என எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில், வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். அதே போன்று,தென் பகுதிக் கண்டங்களும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி ,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து,முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு,தற்பொழுது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்ததாக வெக்னர் கூறினார். அதே போன்று, தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த,ஆப்பிரிக்கக் கண்டமானது,வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து,மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஐரோப்பாக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால்,ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் இருந்த நிலப் பகுதியானது, புடைத்துக் கொண்டு உயர்ந்ததால்,ஆல்ப்ஸ் மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். ஆல்ப்ஸ் மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கும், அப்பகுதியில் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கக் கண்டங்களின் நகர்ச்சி மற்றும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். இவ்வாறு தென் பகுதிக் கண்டத்தில் இருந்து பிரிந்த, தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இந்த இரண்டு கண்டங்கள், முறையே வட மேற்கு மற்றும் வட கிழக்கு ஆகிய திசைகளை நோக்கி விலகி நகர்ந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் ''தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதி'' உருவாகி விரிவடைந்து கொண்டு இருப்பதாகவும் வெக்னர் கூறினார். இந்த நிலையில் ,தென் பகுதியில் எஞ்சியிருந்த அண்டார்க்டிக்காக் கண்டத்தில் இருந்து,இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்கள், பிளவு பட்டு பிரிந்து, வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் வெக்னர் கூறினார். இதில் இந்திய நிலப் பகுதியானது ,ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு தீவுக் கண்டமாக பூமத்திய ரேகைப் பகுதியில் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்ததாகவும் ,ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதாகவும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கு இடையில் இருந்த கடல் பகுதி , புடைத்துக் கொண்டு உயர்ந்ததால், இமய மலைத் தொடர் உருவானதாக வெக்னர் கூறினார். இமய மலையின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு, ஆசியா மற்றும் இந்தியக் கண்டங்களின் நகர்ச்சியும் மோதலுமே காரணம் என்று வெக்னர் கூறினார். அத்துடன் இமய மலைத் தொடர் பகுதியில், அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதற்கும், இந்தியாவின் நகர்ச்சியே காரணம் என்றும் விளக்கம் கூறப் படுகிறது. இந்த விளக்கமானது, ''நகரும் கண்டங்கள்'' என்று அழைக்கப் படுகிறது. ஆனால் வெக்னர் கூறியதைப் போன்று கண்டங்களின் ஒர பகுதிகள் காட்சிதமாகப் பொருந்த வில்லை.ஆனால் முப்பது சதவீத சிறிய குளோப்பில் கண்டங்களின் ஒர பகுதிகள் நன்றாகப் பொருந்தின.அதன் அடிப்படையில் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதாக பல ஆராய்ச்சியாளர்கள் நம்பினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த புவியியல் பேராசிரியர் ஹோபார்ட் முதலில் நகரும் கண்டங்கள் கருத்தை ஆதரித்து பின்னர் கண்டத் தட்டு நகர்ச்சி கருது குறித்து ஆராய்ச்சி செய்தபொழுது விரிவடையும் பூமி கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.அவருக்குப் பிறகு ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த சாமுவேல் வாரேன் காரி என்ற புவியியல் பேராசிரியர் முதலில் வெக்னரின் நகரும் கண்டங்கள் கொள்கையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டார்.பின்னர் கண்டது தட்டு நகர்ச்சி கருத்துக்கு ஆதரவாக இருந்தார்.ஆனால் கண்டது தட்டு நகர்ச்சி கருத்தின் படி கடல் தளமானது மறுபடியும் பூமிக்குள் சென்று அளிக்கிறது என்ற கருத்தை ஏற்க மறுத்தார்.அதன் பிறகு விரிவடையும் பூமி குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆனால் ஏன் விரிவடைகிறது என்று அவர் தெரிவிக்க வில்லை.ஆனால் பிற்காலத்தில் ஒரு கண்டு பிடிப்பு விரிவடையும் பூமி கருத்திற்கு ஆதரவாக அமையும் என்று கூறினார். இந்த நிலையில் தற்பொழுது கலிபோர்னியா பல்கலைக் கழகத்தை சேர்ந்த நில அதிர்ச்சி இயல் நிபுணர் ,நில அதிர்ச்சி அலைகள் பூமிக்குள் பரவுவதில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் பூமியின் உட்கருக்கோளமானது விரிவடைந்து கொண்டு இருப்பதாகத் தெரிவித்து இருக்கிறார்.குறிப்பாக அவர் பூமிக்குள் படிகங்கள் உருவாகுவதால் பூமியின் உட்கருக்க கோளம் விரிவடைகிறதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மேலும் இந்த விரிவானது பிரேசிலுக்கு அடியில் மெதுவாகவும் இந்தோனேசியாவுக்கு அடியில் வேகமாகவும் நடைபெறுவதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற பொழுது ,கடலுக்கு அடியில் நீர் மூழ்கிக் கப்பல்களின் போக்கு வரத்துக்கு பயன் படுத்துவதற்காக ,முதன் முதலில் சோனார் என்ற கருவி பயன் படுத்தப் பட்டு ,கடல் தரையின் மேடு பள்ளங்கள் குறித்த வரை படம் தயாரிக்கப் பட்டது. குறிப்பாக அந்த வரை படத்தை புரூஸ் ஹீசின் மற்றும் மேரி த்ரோப் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் தயாரித்தனர். மேரி த்ராப் பெண் என்பதால் அவர் நீர் மூழ்கிக் கப்பலில் பனி புரிவதற்கு அந்தக் காலத்தில் அனுமதிக்கப் பட வில்லை. வெறும் தரவுகள் மூலமாகவே த்ராப் அந்த வரைபடத்தை தயாரித்தார் அப்பொழுது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையில் எரிமலைத் தொடர் இருப்பதுடன் அதன் இரு புறமும் பிளவுப் பள்ளத் தாக்குகள் இருப்பதையும் வரை படத்தை தயாரித்த மேரி த்ரோப் அறிந்தார். அதன் அடிப்படையில் மேரி த்ராப் வெக்னரின் விளக்கம் சரி என்ற முடிவுக்கு வந்தார். ஆனால் புரூஸ் ஹீசின் பூமி விரிவடைந்து கொண்டு இருக்கும் கருத்தின் மேல் நம்பிக்கை கொண்டார்.தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் கண்டங்களை சுற்றிலும் எரிமலைத் தொடர்கள் இருப்பதை புரூஸ் ஹீசின் அறிந்தார். இந்த நிலையில் கடல் தரையின் மேல் நில அதிர்ச்சிகள் ஏற்படும் இடங்கள் குறித்த ஒரு வரை படதையும் புரூஸ் ஹீசின் நியமித்த ஹோவர்ட் என்ற ஆராய்ச்சியாளர் தயாரித்தார். அந்த நில அதிர்ச்சி வரை படத்தை ஏற்கனவே தயாரித்த எரிமலைத் தொடர்கள் குறித்த வரைபடத்துடன் பொருத்திப் பார்த்த பொழுது ஆச்சரியமாக ஒன்றின் மேல் ஒன்று அச்சாகப் பொருந்தியது. குறிப்பாக வெக்னர் கூறிய படி, கடல் தரையைப் பிளந்து கொண்டு, கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் கடல் தரையில் காணப் பட வில்லை. எனவே கண்டங்கள் எவ்வாறு நகர்ந்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் யோசித்துக் கொண்டு இருந்தனர்.இந்த நிலையில் புரூஸ் ஹீசின் தயாரித்த இரண்டு வரைபடங்கள் மூலம் ஒரு புதிய விளக்கம் முன்மொழியப் பட்டது. அதன் அடிப்படையில்,அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும், பூமிக்கு அடியில் இருந்து பாறைக் குழம்பானது மேற்பகுதிக்கு தொடர்ந்து வெளி வந்து, குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன் கண்டங்களும் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புதிய விளக்கம் கூறப் பட்டது. இவ்வாறு கண்டங்களுக்கு இடையில், புதிய கடல் தளம் உருவாகி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால் பூமியின் அளவானது பெரிதாக வேண்டுமே என்ற கேள்வி எழுந்தது. ஆனால் புதிதாக உருவாகும் கடல் தளமானது, கண்டங்களுக்கு அடியில் மறுபடியும் சென்று அழிவதாகவும், அதனால் பூமியின் அளவானது ஒரே அளவாக இருப்பதாகவும் விளக்கம் கூறப் பட்டது. இந்தக் கருத்தானது ''கண்டத் தட்டு நகர்ச்சி'' என்று அழைக்கப் படுகிறது. இவ்வாறு கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், விளக்கம் கூறப் படுகிறது. அதே போன்று,கடலுக்கு அடியில் ஒரு கண்டத்திற்கு அடியில் அடுத்த கண்டத்தின் கடல் தளமானது திடீரென்று உரசிய படி நகர்ந்து செல்லும் பொழுது, நில அதிர்ச்சி ஏற்படுவதுடன் அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது, மேல் நோக்கி தள்ளப் பட்டு சுனாமி உருவாகுவதாகவும் விளக்கம் கூறப் படுகிறது. எனது யூரேக்கா கணம் இந்த நிலையில் நான் ஒரு நாள் தற்செயலாக நேஷனல் ஜியாகிராபிக் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப் பட்டு இருந்த புதை படிவங்கள் குறித்த கட்டுரையை படித்த பொழுது எனக்கு ஒரு புதிய கருத்து உருவானது. குறிப்பாக அந்தப் பத்திரிக்கையில் ஒரு மலையின் மேல் இரண்டு பேர் நின்ற நிலையில் கையில் மண் வெட்டும் கருவியால் தரையைத் தோண்டிக் கொண்டு இருந்தனர்.குறிப்பாக அவர்கள் இருப்பதும் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் இருநூற்றி இருபது அடி ஆழத்தில் கடல் தரையின் மேல்; வாழ்ந்த கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருப்பதாகவும் அவர்கள் நின்று கொண்டு இருக்கும் இடமானது ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்கு அடியில் 220 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடைத்ததாகவும் தெரிவிக்கப் பட்டு இருந்தது. அதை படித்ததும் எனக்கு அந்த மலை மட்டுமின்றி அந்த மழைப் பிரதேசம் முழுவதுமே கடலுக்கு அடியில் இருந்து உயர்ந்து இருப்பதாகத் தோன்றியது.அப்பொழுதே நான் ஒரு புதிய விஷத்தை கண்டு பிடித்து விட்டதாகவே உணர்ந்தேன்.அடுத்த பக்கத்திலேயே சீனாவின் உள் நாடு ,மாலிக் பிரதேசத்திலும் ஆராய்ச்சியாளர்கள் கடல் உயிரினங்களின் புதை படிவங்களை எடுத்துக் கொண்டு இருக்கும் படமும் வெளியாகி இருந்தது.உடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் குறித்து இணையத்தில் தகவல் சேகரித்தேன்.அப்பொழுது வட அமெரிக்காவில் உள்ள ஐம்பது மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பது தெரிய வந்தது.உடனே கைக்கு கணங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து நேராக மேல் நோக்கி உயர்ந்து இருப்பது புரிந்தது. இந்த நிலையில் நான் சுனாமி குறித்த ஆய்வில் ஈடுபட்ட பொழுது, தெற்காசிய சுனாமிக்கு நாசா முன்னுக்குப் பின் முரணாக இரண்டு வெவ்வேறு விளக்கங்களைத் தெரிவித்து இருப்பதைக் கண்டு உண்மையை அறிவதற்காக எரிமலைப் பகுதிகளில் எடுக்கப் பட்ட செயற்கைக் கோள் படங்கள் மற்றும் நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடங்களை ஆய்வு செய்ததில் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் பூமிக்கு அடியில் எரிமலைகளை வெடித்ததாலேயே நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்தது அதே போன்று வெப்ப மண்டலக் கால நிலையில் வாழக் கூடிய வளர்க்க கூடிய விலங்கினங்கள் மற்றும் தாவரங்களின் புதை படிவங்களானது பனிப் பிரதேசமான துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறித்தும் தெரிய வந்தது. கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களிலும் தீவுகளிலும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்குகள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது குறித்தும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் டைனோசர்கள் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்தபொழுது துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்குப் பதிலாக பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது குறைந்ததால் துருவங்களில் பணிப் படலங்கள் உருவாகி இருப்பதுடன் பூமியானது கடல் மட்ட உயர்வால் மூழ்கிக் கொன்டு இருப்பதும்,பூமியானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது. அத்துடன் கடல் உயிரினங்களின் புதை படிவங்களானது கண்டங்களின் மேல் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும்,தெரிய வந்தது.அதே போன்று டைனோசர்கள் மற்றும் மரங்களின் புதை படிவங்களானது கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டதும் தெரிய வந்தது.இவ்வாறு கண்டங்கள் உயர்ந்து கொண்டு இருப்பதன் மூலமாகவும் அதே போன்று கடல் மட்டமும் உயர்ந்து கொண்டு இருப்பதன் மூலமாகவும் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவு உள்பட மத்திய தரைக்கு கடல் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிந்தவங்கள் மூலம் கடல் மட்ட உயர்வானது கண்டங்கள் உயரும் வேகத்தை விட அதிகமாக இருப்பதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. இது போன்று நான் மேற்கொண்ட ஆய்வில் பல புதிய விஷயங்களைக் கண்டு பிடித்து இருக்கிறேன். புதை படிவங்கள் குறித்த ஆய்வில் எனக்குத் தெரிய வந்த விபரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம். 00000000000000 ஆர்க்டிக் டைனோசர்களின் புதை படிவங்கள். தற்பொழுது அறிவியல் உலகில் ஒரு விஷயம் ஆராய்ச்சியாளர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி இருக்கிறது.அதாவது ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் எப்படி வாழ்ந்தன என்ற கேள்விக்கு விடை தெரியாமல் குழம்பிக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது பனிப் படலங்களால் மூடப் பட்டு இருக்கும் வட துருவப் பகுதியில் ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிரெண்டு இனவகையை சேர்ந்த டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.அத்துடன் மிகவும் இள வயது டைனோசர்களின் பற்கள் மற்றும் டைனோசர்களின் முட்டைகளின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. ஆனால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்கா,மற்றும் சைபீரியா போன்ற நிலப் பகுதிகள் எல்லாம் பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் பகுதிக்குள் நகர்ந்து வந்து விட்டது. சாதாரண கோழி முட்டை பொரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் தேவை,எனவே நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய டைனோசர்களின் முட்டைகளானது பனிப் பிரதேசத்தில் எப்படி பொரிந்தன என்ற கேள்வி எழுகிறது. குறிப்பாக பூமியானது தன் அச்சில் இருபத்தி மூன்றரை டிகிரி சாய்ந்து இருப்பதால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டுக்கு நான்கு மாத காலம் தொடர்ந்து பகலும்,நான்கு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது. இது போன்று நான்கு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால், சூரிய ஒளி இன்றி, தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரிக்க இயலாது. எனவே யானைக் கூட்டத்தை விட, பல மடங்கு அதிக தாவரங்களை உண்ணக் கூடிய, டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய, அடர்ந்த பசுமைக் காடுகள் எப்படி ஆர்க்டிக் பகுதியில் வளர்ந்தன என்ற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக டைனோசரானது பாலூட்டி விலங்கினத்தை போன்று சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்யவோ, அதனை பாதுகாக்க மயிர்த் தோல் தகவமைப்போ இல்லாத ஊர்வன வகை விலங்கினத்தை சேர்ந்தது.முட்டைகள் மூலம் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. சாதாரண கோழி முட்டைகள் பெரியவே முப்பத்தி நான்கு டிகிரி சென்டி கிரேட் வெப்பம் தேவை ஆனால் ஆர்க்டிக் பகுதியில் ஆண்டு சராசரி வெப்பமே பத்து டிகிரி சென்டி கிரேட் ஆகும். எனவே ஆர்க்டிக் பகுதியில் நெருப்புக் கோழி முட்டையை விடப் பெரிய ''டைனோசர்களின் முட்டைகள் எப்படி பொரிந்தன'' என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. சில சிறிய அளவுள்ள டைனோசர்கள் தங்களின் முட்டைகளை அடை காக்கக் கூடியது என்றாலும் கூட, ஆர்க்டிக் பகுதியில் ஏழு டன் எடையுள்ள ''எட்மாண்டோ சாரஸ்'' என்ற டைனோசரின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.ஏழு டன் எடையுள்ள டைனோசரால் முட்டைகளின் மேல் அமர்ந்து அடை காக்க சாத்தியம் இல்லை . எனவே ஆர்க்டிக் பகுதியில் பெரிய அளவு டைனோசர்கள் முட்டைகள் எப்படி பொரிந்தன என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே சில உயிரியல் வல்லுநர்கள் பனி மான்களை போன்று டைனோசர்கள் ''குளிர் கால இடப் பெயர்ச்சி'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். சில உயிரியல் வல்லுநர்கள் பனிக் கரடிகளைப் போன்று ,டைனோசர்கள், ''குளிர் கால நெடுந்துயில்'' மேற்கொண்டு இருக்கலாம் என்று நம்பினார்கள். இந்த நிலையில் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த டாக்டர் கிரிகர் எரிக்சன் என்ற ஆராய்ச்சியாளர் டைனோசர்களின் முட்டைப் புதை படிவங்களுக்கு உள்ளே இருந்த டைனோசர் குஞ்சுகளின் பற்களில் இருந்த வளையங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையில், அதன் வயதானது ஆறு மாதம் என்று கண்டு பிடித்து இருக்கிறார். அதன் அடிப்படையில் டைனோசர்களின் முட்டைகள் பொரிய ஆறு மாத காலம் ஆகி இருக்கிறது என்றும், அதன் பிறகும் டைனோசர் குஞ்சுகள் சுயமாக இயங்க ஓராண்டு காலம் ஆகி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார். எனவே ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த டைனோசர்களானது கோடை கால இடப் பெயர்ச்சியோ அல்லது குளிர் கால நெடுந்துயிலோ மேற்கொண்டு இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு தற்பொழுது ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். மாறாக ஆர்க்டிக் பகுதியில் டைனோசர்கள் ஆண்டு முழுவதும் தங்கி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்து இருக்கின்றன என்ற முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்து இருக்கின்றனர். எனவே ஆர்க்டிக் பகுதியில் நான்கு மாத கால தொடர் இரவுக் காலத்தில் டைனோசர் கூட்டத்திற்கு உணவளிக்கக் கூடிய தாவரங்கள் எப்படி சூரிய ஒளியின்றி வளர்ந்தன?டைனோசர்கள் எப்படி இனப் பெருக்கம் செய்து வாழ்ந்தன? மைனஸ் எண்பது டிகிரி வெப்ப நிலையில், நீர் கூட உறைந்து பனிக் கட்டி ஆகி விடும் சூழ் நிலையில், டைனோசர்கள் எப்படி தண்ணீரைக் குடித்து வாழ்ந்தன? தாவரங்கள் நீருக்கு என்ன செய்தன ?போன்ற கேள்விகளும் விடை அளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. பூமியின் சுருக்கமான வ்சரலாறு. இதே போன்று கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது, கடலால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. தற்பொழுது கடலின் சாராசரி ஆழமானது நான்கு கிலோ மீட்டராக இருக்கும் நிலையில், நார்வே நாட்டுக்கு கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காக கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில் ஐரோப்பாக் கண்டத்தில் இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக வாழ்ந்த தவர உண்ணி வகை டைனோசரான பிளேட்டியோ சாரல் என்று அழைக்கப் படும் பனை மாற உயர டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர். இதே போன்று இந்திய பெருங் கடல் பகுதியிலும்,கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் காலத்தில் மூழ்கிக் கிடைக்கும் கெர்கூலியன் என்ற கடலடி பீட பூமியானது எப்பொழுது உருவானது என்பதை அறிவதற்காக பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த டாக்டர் மைக்கேல் காபின் தலைமையிலான குழுவினர் அந்த கடலடி எரிமலைப் பீட பூமியின் மத்திய பகுதியில் இருந்து எடுக்கப் பட்ட எரிமலைப் பாறைப் படிவுகளின் தொன்மையை ஆய்வு செய்த பொழுது அந்த படிவுகளில் ஒன்பது கோடி ஆண்டுகள் தொன்மையான மரங்களின் கருகிய பாகங்கள் ,விதை மற்றும் கரைந்தது துகள்கள் இருப்பதைக் கண்டு பிடித்தனர். இதன் அடிப்படையில் அந்தக் கடலடி பீட பூமியானது ஒரு காலத்தில் கடல் மட்டத்துக்கு மேலாக ஒரு தீவாக இருந்திருப்பதாகவும் அந்தக் குழுவினர் தெரிவித்து இருக்கின்றனர். தற்பொழுது கடலின் சராசரி ஆழமானது, நான்கு கிலோ மீட்டராக இருக்கிறது. ஆனால் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட, டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் மூலம், டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. அத்துடன்,டைனோசர் காலத்தில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து இருந்த பொழுது , கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து அதன் வழியாக டைனோசர் முதலான விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு இடம் பெயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. அத்துடன் கடல் நீரானது பூமிக்குள் இருந்து மேற்பகுதிக்கு வந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்த பொழுது, கடலின் பரப்பளவும் குறைவாக இருந்த பொழுது, வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் அதிகமாக இருந்திருக்கிறது. அதனால் துருவப் பகுதிகளில் பனிப் படலங்களுக்கு பதிலாக பசுமைக் காடுகள் இருந்திருக்கின்றன.அதில் டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து இருக்கின்றன. அதன் பிறகு கடல் மட்டமானது, பூமிக்குள் சுரந்த நீரால் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்த பொழுது, கடலின் பரப்பளவும் அதிகரித்ததால், வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால், ஏற்பட்ட கால நிலை மாற்றத்தால்,துருவப் பகுதிகளில் பசுமைக் காடுகள் அழிந்து இருக்கின்றன. அதனால் அதில் வாழ்ந்த டைனோசர்களும் அழிந்து இருக்கின்றன. தொடந்து கடல் மட்டம் உயர்ந்ததால் கடலின் பரப்பளவு அதிகரித்ததால் வளி மண்டலத்தின் வெப்ப நிலையானது மேலும் குளிர்ந்தால் துருவங்களில் பனிப் படலங்கள் உருவாகின. இதன் மூலம் கடல் நீரானது, பூமிக்குள் சுரந்த நீரானது,புவியின் மேற்பகுதிக்கு வந்து சேர்ந்ததால், கடல் உருவாகி இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. மேலும் பூமியின் வளி மண்டலம் குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணமாகிறது. முக்கியமாக கண்டங்களின் மேல் பரவலாக கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பாட்டுக்கு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லா ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று கடலுக்கு அடியில் இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக கண்டங்களானது கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாடியிரம் ஆதி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் எலும்புத் புதை படிவங்கள் மூலம் கடல் மட்டமானது வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. நீர் யானையின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் அவைகளால் நீரின் மேற்பரப்பில் நீந்த இயலாது. குறிப்பாக அவைகளின் உடல் அடர்த்தி மிகவும் அதிகம் என்பதால் நீர் யானைகளால் நீரில் மிதக்கக் கூட இயலாது. ஆனால் ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவில் குள்ள வகை நீர் யானைகளின் எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டிருகிறது. அந்த எலும்புப் புதை படிவங்கள் அடிப்படையில் அந்த விலங்குகள் நானூறு கிலோ எடையுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. குள்ள வகை நீர் யானைகள் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கினம்.குள்ள வகை நீர் யானைகளால் நீர்ப் பரப்பின் மேல் நீந்தவோ மிதக்கவோ இயலாது. அதன் உடலும் நீண்டு குறுகி இருப்பதுடன் கால்களும் குட்டையாக இருப்பதால் லெமூர் குரங்குகளைப் போன்று குள்ள வகை நீர் யானைகளும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களைத் தொற்றிக் கொண்டு வந்திருக்காலாம் என்ற விளக்கம் பொருத்தமற்ற விளக்கம். லெமூர் குரங்குகள் ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை பிரசவிப்பதால் மடகாஸ்கர் தீவில் கரை ஒதுங்கிய லெமூர்கள் வளர்ந்து இனப் பெருக்கம் செய்து அந்த இனம் பெருகி இருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் குள்ளவகை நீர் யானைகள் வழக்கமாக ஒரே ஒரு குட்டியையே பிரசவிக்கிறது. ஆனால் குள்ள வகை நீர் யானைகள் மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருப்பதும் அறியப் பட்டுள்ளது. இந்த நிலையில் புதை படிவங்கள் மூலம் மடகாஸ்கர் தீவில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ், ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி, ஹிப்போ பொட்டமஸ் லாலுமெனா என மூன்று இனத்தைச் சேர்ந்த குள்ள வகை நீர் யானைகள் வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் ஒரே ஒரு குள்ள வகை நீர் யானை மட்டும் மடகாஸ்கர் தீவில் வளர்ந்த ஒரு குள்ள வகை நீர் யானை இனத்தில் இருந்து பரிணாம மாற்றம் பெற்று இருந்திருக்கலாம் என்று நம்பப் படுகிறது. அப்படியே ஆனாலும் கூட மடகாஸ்கர் தீவுக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு முறை நீர் யானைகள் கடலில் மிதக்கும் மரக் கிளைகள் மற்றும் தாவரங்களில் தொற்றிக் கொண்டு வந்திருக்கும் என்ற விளக்கம் கேள்விக் குறியாகவே இருக்கிறது. அவ்வாறு வந்த பிறகு இரண்டு முறையும் பெரிய வகை நீர் யானைகள் இரண்டு குட்டிகளையே பிரசவித்து இருக்கும் என்பது அசாதாரணமான விளக்கம். இதில் ஹிப்போ பொட்டமஸ் மடகாஸ்கரியென்சிஸ் என்ற இனம் தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் குள்ள வகை நீர் யானை இனத்தைப் போல் இருக்கிறது. இதே போன்று மடகாஸ்கர் தீவில் கண்டு பிடிக்கப் பட்ட ஹிப்போ பொட்டமஸ் லெமெரெல்லி என்று பெயர் சூட்டப் பட்ட குள்ள வகை நீர் யானையானது, தற்பொழுது ஆப்பிரிக்கக் கண்டத்தில் காணப் படும் பெரிய நீர் யானையின் எலும்பு அமைப்புகளை ஒத்திருப்பதால் அதன் இனத் தோன்றலாக கருதப் படுகிறது. அதாவது மடகாஸ்கர் தீவுக்கு வந்த பெரிய நீர் யானை தீவில் குறைந்த அளவில் கிடைத்த உணவுப் பழக்கத்தால் குள்ள வகை நீர் யானையாக மாற்றம் பெற்றதாக கருதப் படுகிறது. எனவே மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் குறைந்த பட்சம் இரண்டு முறை வந்திருக்கின்றன. இவ்வாறு மடகாஸ்கர் தீவுக்கு நீர் யானைகள் இரண்டு முறை வந்திருப்பது தற்செயலாக இருக்க இயலாது. எனவே கடல் மட்டம் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருப்பதையும் அதன் காரணமாக ஆப்பிரிக்கக் கண்டத்துக்கும் மடகாஸ்கர் தீவுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதையுமே மடகாஸ்கர் தீவில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் எடுத்துக் காட்டப் படுகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,மற்றும் சிசிலி ஆகிய தீவுகளிலும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. மிகவும் அரிதாக இரண்டு குட்டிகளை பிரசவிக்கும் குள்ள வகை நீர் யானைகள் ஒவ்வொரு தீவுக்கும் அசாதாரணமான முறையில் வந்து சேர்ந்த பிறகு,ஏழு முறையும் வழக்கத்துக்கு மாறாக இரண்டு குட்டிகளை பிரசவித்து இருக்கும் என்பது முற்றிலும் இயற்கைக்கு மாறான விளக்கம். எனவே மடகாஸ்கர் உள்பட,கிரிட்டி,சைப்ரஸ்,மால்டா,சிசிலி ஆகிய தீவுகளில் காணப் படும் குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம், கடல் மட்டம் பல்லாயிரம் அடி தாழ்வாக இருந்திருப்பதும் அதன் காரணமாக கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதும் உறுதியாகிறது. குறிப்பாக குள்ள வகை நீர் யானை இனமாமனது இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த இனமாகும் .ஆப்பிரிக்கக் கண்டத்திற்கும் மடகாஸ்கர் தீவும் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் இருக்கிறது. இந்த நிலையில் மடகாஸ்கர் தீவில், ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெரிய வகை நீர் யானை இனத்தில் இருந்து இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு பரிணாம வளர்ச்சி அடைந்த குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம்,கடல் மட்டமானது இரண்டு கோடி ஆண்டுகளில் இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது. கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் வரை உயர்ந்து இருப்பது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது . இதன் மூலம் கடல் மட்டமானது கண்டங்களை விட வேகமாக உயர்ந்து கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால் எதிர் காலத்தின் கண்டங்கள் மற்றும் தீவுகள் எல்லாம் கடல் மட்ட உயர்வால் கடலுக்குள் மூழ்கி விடும். அதாவது தீவுகளில் கண்டு பிடிக்கப் பட்ட குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்கள் மூலம் பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பது தெரிய வந்துள்ளது 00000000999000000000000000000000 ஒரே வரியில் உண்மையை வெளிப் படுத்தி இருக்கிறேன். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் சுமத்ரா தீவு பகுதியிலும் அதே போன்று வட அமெரிக்க்கா மற்றும் தென் அமெரிக்க்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கும் ஹய்த்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகள் மற்றும் சுனாமிக்கு அடிப்படை ஆதாரமில்லாத காரணத்தால் அமெரிக்காவின் முன்னணி ஆய்வு மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் அந்த பேரிடர்கள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 எரிமலை வெடிப்பே ...நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளுக்கும் உண்மையான காரணம். அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் ஏன் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை? சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. அதே போன்று ஹைத்தி தீவானது வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 26.12.2004 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது சுமத்ரா தீவுப் பகுதியில் உருவானது. அதே போன்று கடந்த 10.01.2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய நில அதிர்ச்சி மற்றும் சுனாமியானது ஹைத்தி தீவில் உருவானது. நான்கு லட்சத்திற்கும் அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய இந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் அமெரிக்க நாட்டின் முன்னணி அறிவியல் ஆராய்ச்சி மையமான நாசா மற்றும் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான காரணத்தைக் கூற இயல வில்லை. ஏனென்றால் இந்த ஆராய்ச்சியாளர்கள் நம்பும் கண்டத் தட்டு நகர்ச்சிக் கருத்தின் படி,தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் தளங்களுடன் தனித் தனியாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அவ்வாறு கண்டங்கள் நகரும் பொழுது, கடல் தளப் பாறைகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதாகவும், அதனால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், அறிவியல் உலகில் நம்பப் படுகிறது. அதே போன்று கடலுக்கு அடியில் ஒரு கண்டத்தின் கடல் தளமானது உரசியபடி நகர்ந்து செல்வதாகவும், அப்பொழுது நில அதிர்ச்சிகள் ஏற்படுவதுடன், அந்தப் பகுதியில் இருக்கும் கடல் நீரானது மேல் நோக்கி தள்ளப் பட்டு, சுனாமி உருவாகுவதாகவும் நம்பப் படுகிறது. இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' தனித்த தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அதே போன்று வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது ஆதார பூர்வமாகத் தெரிய வந்துள்ளது. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே அமெரிக்க ஆராய்ச்சியாளர்களால் சுமத்ரா தீவுப் பகுதியிலும்,ஹைத்தி தீவிலும் ஏற்பட்ட நில அதிர்ச்சிகளுக்கும் சுனாமிகளும் சரியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. இந்த நிலையில் இந்த இரண்டு இடங்களிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளாலேயே அந்த நில அதிர்ச்சியிலும் சுனாமிகளும் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் ஆதார பூர்வமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாகஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களானது பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,தென் துருவப் பகுதியில் ஒன்றாக இணைந்த நிலையில் அண்டார்க்டிகாக் கண்டத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததாகவும் ,அதன் பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும்,அண்டார்க்டிகாக் கண்டத்தில் இருந்து, தனித் தனியாகப் வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்பப் படுகிறது. தற்பொழுது இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஐயாயிரம் கிலோ மீட்டர் இடைவெளியில் அமைந்து இருப்பதுடன்,இந்தியாவானது பூமத்திய ரேகைக்கு வடக்கிலும் ஆஸ்திரேலியாவானது பூமத்திய ரேகைக்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது . எனவே, இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் உண்மையில் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருந்தால், இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். இந்த நிலையில் நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 1963 ஆம் ஆண்டு முதல், கடந்த 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில்,உலகெங்கும் நிகழ்ந்த 3,58,214 நில அதிர்ச்சிகள் ஏற்பட்ட இடங்களைக் குறித்து, ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம்'' ஒன்றை தயாரித்து வெளியிட்டனர். அந்த ''உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில்'' இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் பதிவாகி இருக்க வில்லை. இதன் மூலம் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. முக்கியமாக அதே நாசா அமைப்பினர் ''கண்டத் தட்டுகளின் நகர்ச்சியை'' குறிப்பதாகக் கூறி இன்னொரு வரை படத்தையும் வெளியிட்டனர். அந்த வரை படத்திலும் கூட, இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் ''என்ன நடக்கிறது என்று உறுதியாகத் தெரிய வில்லை'' என்றும் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். குறிப்பாக சுமத்ரா தீவானது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாக் கணடங்களுக்கு இடைப் பட்ட பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில், சில ஆராய்ச்சியாளர்கள்,கடந்த 26.12.2004 அன்று ஏற்பட்ட தெற்காசிய சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சியானது,இந்தியக் கண்டத்தின் நகர்ச்சியால் இந்தியக் கண்டத்தின் கடல் தளமானது இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் ,வேறு சில ஆராய்ச்சியாளர்கள், ஆஸ்திரேலியாக் கண்டத்தின் நகர்ச்சியால் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் கடல் தளமானது, இந்தோனேசியத் தீவுகளுக்கு அடியில், உரசியபடி நகர்ந்து, சென்றதால்தான் ஏற்பட்டது என்று விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில், நாசாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த இரண்டு விளக்கங்களில் எது சரியான விளக்கம் என்று தெரிய வில்லை. எனவே இரண்டு விளக்கங்களையும் நாசா தனது இணைய -பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. ஆக, தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை தெரிவிக்க வில்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகி இருக்கிறது. அத்துடன் கண்டங்கள் எல்லாம் தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறுவதற்கு அடிப்படை ஆதாரம் இல்லை என்பதும் உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன என்ற கேள்வி விடையளிக்கப் படாத நிலையிலேயே இருக்கிறது. தெற்காசிய சுனாமிக்கு காரணம் என்ன? குறிப்பாக கடந்த 26.12.2004 அன்று சுமத்ரா தீவுக்கு அருகில் நில அதிர்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுது அந்தப் பகுதியில் இருந்த சிமிழு என்ற தீவின் வட மேற்குப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து நான்கு அடி வரை உயர்ந்து இருந்தது. அதனால் அந்தத் தீவின் வட மேற்குப் பகுதியில் புதிதாக கடற் கரையும் உருவாகி இருந்தது.அதனால் அந்தப் பகுதியில் அது வரை கடலுக்குள் மூழ்கிக் கிடந்த கடல் தாவரங்களானது வெளியில் தெரிந்தன. அதே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது போன்ற தரை மட்ட மாறுபாடுகள் எரிமலைகளை சுற்றிலும் உருவாகி இருப்பதை எரிமலை இயல் வல்லுநர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் உள்ள நான்கு எரிமலைகளை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில், வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இவ்வாறு அந்த எரிமலைகளை சுற்றிலும் வரப்புகள் வெட்டியதை போன்ற தரை மட்ட மாறுபாடுகள் ஏற்பட்டதற்கு அந்த எரிமலைகள் சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கும் பொழுது, எரிமலையை சுற்றிலும் உள்ள தரைப் பகுதியும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் அளவுக்கு உயர்ந்து இறங்கியதால் ஏற்பட்டது என்று எரிமலை இயல் வல்லுநர்கள் விளக்கம் தெரிவித்து இருக்கின்றனர். எனவே சிமிழு தீவில் 20.02.2008 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்டதற்கும்,சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, சிமிழு தீவு நான்கு அடி வரை உயர்ந்ததற்கும்,சிமிழு தீவுக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே காரணம் என்பது,தீவில் உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும், எரிமலையைச் சுற்றிலும் உருவாகுவதை போன்று பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய, மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பதன் மூலம், ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதே போன்று தனித் தனியாக கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக்கு கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில் 12.10,2010 அன்று இரண்டு லட்சத்திற்கும் அதிகமான உயிர்களைப் பறித்த நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயல வில்லை. ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலை சீற்றங்களும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுவது சோனார் கருவி ஆய்வு மூலம் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அந்த எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்கு அடியில் இருந்து வெப்பமான பாறைக் குழம்பு மேற்பகுதிக்கு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளங்களுடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கியும்,யூரேசியாக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் தென் பகுதியில், கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி முறையே வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. அதன் அடிப்படையில்,வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், தென் அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கியும்,வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன்ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது. இந்த கருத்து உண்மை என்றால் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இந்த இரண்டு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இந்த இரண்டு கண்டங்களுக்கு இடைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அந்த பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை என்றும் அழைக்கப் படுகிறது. இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதும்,கண்டங்கள் நிலையாக இருப்பதும், நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் ஆதாரபூர்வமாக இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலின் மத்திய பகுதியில் கடலுக்கு அடியில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருந்தால்,அந்த எரிமலைத் தொடருக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது குறைவாகவும், அதே நேரத்தில் கண்டங்களுக்கு அருகில் இருக்கும் கடல் தளப் பாறைகளின் தொன்மையானது அதிகமாகவும் இருக்க வேண்டும். இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் மத்திய கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளான 'புனித பீட்டர் பாறை' மற்றும் ''புனித பால்'' பாறைத் தீவுகளில் இருந்து எடுக்கப் பட்ட பாறைகளின் தொன்மையை மதிப்பிட்ட பொழுது, அந்தப் பாறைகளின் தொன்மையானது ''நானூற்றி ஐம்பது கோடி'' ஆண்டுகளாக இருப்பதை 'ராண்டல் ரைட்' என்ற புவியியல் வல்லுநர் ஆய்வில் கண்டு பிடித்து, அமெரிக்கப் புவியியல் ஆய்விதழில் தெரிவித்து இருக்கிறார். குறிப்பாக பூமியின் மேல் காணப் படும் தொன்மைப் பாறைகளின் தொன்மையை மதிப்பிட்டதன் அடிப்படையில், பூமி தோன்றி நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகள் ஆகி இருக்கலாம், என்று மதிப்பிடப் பட்டு இருக்கிறது. இதன் மூலம் பூமி தோன்றிய காலத்தில் இருந்தே, அட்லாண்டிக் கடலின் மத்திய பகுதியில், புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விரிவடைந்து நகர்ந்து கொண்டு இருக்க வில்லை என்பதுடன், கடல் தளமானது நிலையாகவும்,தொடர்ச்சியாகவும் இருப்பதுடன், கண்டங்களும் நிலையாக இருப்பது, ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகிறது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கு ஆராய்ச்சியாளர்களால் ஏன் விளக்கம் கூற இயல வில்லை? குறிப்பாகக் கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் இன்றளவும் விவாதித்துக் கொண்டு இருக்கின்றனர். ஏனென்றால் கண்டத் தட்டு நகர்ச்சி கருத்தின் படி ,கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் எப்படி உருவாகியது என்பது குறித்து ஒரு விளக்கம் கூறப் படுகிறது. அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் படும் பொழுது, கடல் தளத்தின் மேல் தொடர்ச்சியாக எரிமலைகள் உருவாகுகின்றன என்று நம்பப் படுகிறது. அத்துடன் வட அட்லான்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. அதே போன்று தெற்கு அட்லான்டிக் கடல் தளமானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் அதனால் அந்தக் கடல் தளத்துடன் வட அமெரிக்கக் கண்டமானது வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.. இந்த நிலையில் கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் குறிப்பாக இந்த இரண்டு கடல் தள பகுதிக்கும் இடைப் பட்ட கடல் தள பகுதியில் அமைந்து இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக்கு கூட்டமானது அட்லான்டிக் கடல் தள பகுதியில் உருவாகி இருந்தால் அந்த எரிமலைத் தீவுக்கு கூட்டமானது நேர் கொட்டுப் பாதையில் உருவாகி இருக்க வேண்டும்.ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமோ கவிழ்த்துப் போட்ட 'ட ' வடிவில் உருவாகி இருக்கிறது. எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லான்டிக் கடல் பகுதியில் உருவாகி இருக்க இயலாது என்று ஆராய்ச்சியாளர்கள் நினைக்கின்றனர். தற்பொழுது பசிபிக் கடல் பகுதியில் உள்ள காலபாகஸ் எரிமலைத் தீவுக்கு கூட்டமானது ஒழுங்கற்ற வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில்,குறிப்பாக காலபாகஸ் தீவுகள் இருக்கும் இடத்திலேயே உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம் என்றும் தற்பொழுது கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் நம்புகின்றனர். இந்தக் கருத்தானது ''பசிபிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த கருத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வண்ணம் மத்திய அமெரிக்க நிலப் பகுதி இருக்கிறது. எனவே எப்படி இந்த நிலப் பகுதியை கடந்து கரீபியன் தீவுக் கூட்டம் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்திருக்கும் என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அமெரிக்க நிலப் பகுதி உருவாகி இருக்க வில்லை என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்த பிறகு,மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பூமிக்குள் இருந்து உயர்ந்து இருக்கலாம் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறினார்கள். இந்த நிலையில் மத்திய அமெரிக்க நிலப் பகுதியில் உள்ள, நிகரகுவா நாட்டு மலைப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்களை, இந்தியாவின் தொல் தாவரவியல் வல்லுநரான ஸ்ரீ வத்சவா குழுவினர் கண்டு பிடித்தனர். அத்துடன் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள, கியூபா தீவிலும் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, டைனோசரின் எலும்பு புதை படிவங்களை, தொல் விலங்கியல் வல்லுநர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் மத்திய அமெரிக்க நிலப் பகுதியானது பதினாறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இருந்து இருப்பது நிரூபணம் ஆகிறது. எனவே பசிபிக் கடல் மாதிரி விளக்கம் ஒரு அடிப்படை ஆதாரமற்ற விளக்கம். எனவே வேறு சில ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே உருவாகி இருக்கலாம் என்று ஒரு விளக்கத்தை முன் வைத்து இருக்கின்றனர். இந்தக் கருத்தானது ''அட்லாண்டிக் கடல் மாதிரி '' என்று அழைக்கப் படுகிறது. இந்த விளக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அட்லாண்டிக் கடல் பகுதியில் கரீபியன் தீவுக் கூட்டத்தை உருவாக்கியதாக்க கூறப் படும் எரிமலைப் பிழம்பு எதுவும் காணப் பட வில்லை. அது மட்டுமின்றி கண்டத் தட்டு நகர்ச்சி கருத்து படி, கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில், ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டால் , கடல் தளத்தின் மேல் வரிசையாக எரிமலைத் தீவுகள் உருவாக வேண்டும். ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் உருவாகி இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டமானது வரிசையாக உருவாகாமல் கவிழ்ந்துப் போட்ட ''ட '' வடிவில் உருவாகி இருக்கிறது.இதன் மூலமாகவும் கடல் தளமானது நிலையாக இருப்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம்,டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தாழ்வாக இருந்து இருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் கரிபியன் தீவுக் கூட்டமானது தொடர்ச்சியாக பாலம் போன்று இருந்து இருந்திருப்பதும் அதன் வழியாக டைனோசர்கள் இடம் பெயர்ந்து இருப்பதும் அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்து இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இவ்வாறு கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எப்படி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் வந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில், அந்த தீவில் ஏற்பட்ட சுனாமிக்கு நில அதிர்ச்சிக்கும் விளக்கம் கூற வேண்டிய இக்கட்டான நிலைமை, அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கு ஏற்ப்பட்டு விட்டது. இந்த நிலையில்,அந்த ஆராய்ச்சியாளர்கள் கரீபியன் தீவுக் கூட்டம் எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று குறிப்பிட்டுக் கூறினால் பின்னர் அது தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் கூற வேண்டிய நிலை ஏற்படும் என்பதற்காக,அந்த நிலையை தவிர்க்கும் பொருட்டு, கரீபியன் தீவுக் கூட்டமானது குறிப்பாக எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டு இருக்கிறது . எனவே கரீபியன் பாறைத்த தட்டானது வட அமெரிக்கக் கண்டத்தை பொருந்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.என்று '' மையமாக '' ஒரு விளக்கத்தைக் கூறி மிகவும் சாமர்த்தியமாக இக்கட்டில் இருந்து தப்பித்து விட்டனர். அதாவது வட அமெரிக்கக் கண்டத் தட்டு, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், கரீபியன் பாறைத் தட்டானது, அட்லாண்ட்டிக் கடல் பகுதியில் உருவாகி, மேற்கு திசையில் நகர்ந்து கொண்டு இருந்தாலும் கூட,வட அமெரிக்கக் கண்டத் தட்டை விட மெதுவாக நகர்ந்து கொண்டு இருப்பதால் வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில் கரீபியன் பாறைத்த தட்டானது, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று, கரீபியன் பாறைத் தட்டானது,பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எப்படியோ நுழைந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்த பிறகு, தற்பொழுது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும்,அதனால் கரீபியன் பாறைத் தட்டானது,தற்பொழுது வட அமெரிக்கக் கண்டத் தட்டைப் பொறுத்த மட்டில், கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்.பொருள் கொள்ள முடியும். ஆனால் உண்மையில் இந்த விளக்கமானது சரியான விளக்கம் அல்ல. உண்மையில் கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே உருவாகி எந்தத் திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தது, தற்பொழுது எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது, என்று விளக்கமாகக் கூறினால் மட்டுமே அந்த விளக்கமானது சரியான விளக்கம் ஆகும். அதாவது கரீபியன் தீவுக் கூட்டமானது எங்கே உருவாகி எந்த திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்ற கேள்விக்கு விடை தெரியாததால் USGS ஆராய்ச்சியாளர்களால் சரியான விளக்கத்தை தெரிவிக்க இயலா வில்லை. ஆக தெற்காசிய சுனாமிக்கு நாசா ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தை கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயலாததைப் போலவே ,ஹைத்தி தீவில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் , அமெரிக்காவின் USGS என்று அழைக்கப் படும் ஐக்கிய மாகாண புவியியல் கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சரியான விளக்கத்தைக் கண்டத் தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் கூற இயல வில்லை என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இந்த நிலையில் இந்த இரண்டு தீவுகளிலும் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகளால் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் பதிவுகள் மூலம் ஆதாரப் பூர்வமாகவும் ஆணித் தரமாகவும் நிரூபணம் ஆகி இருக்கிறது. ரேடான் வாயுக் கசிவு - கூடுதல் ஆதாரம் நில அதிர்ச்சி மையங்களைச் சுற்றிலும், எரிமலையை சுற்றி உருவாகும் மேடு பள்ள வளையங்களுக்கு எரிமலைச் செயல் பாடே காரணம் என்பதை மெய்ப்பிக்கும் ஆதாரமாக ரேடான் வாயு விளங்குகிறது. குறிப்பாக இத்தாலி நாட்டில் உள்ள 'லா அகுலா' நகரில் 06.04.2009 அன்று நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது, நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும், பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறு பாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, பூமிக்கு அடியில் இருந்து , ''ரேடான்'' என்று அழைக்கப் படும் கதிரியக்கத் தன்மை உடைய வாயு, கசிந்து இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது. குறிப்பாக ரேடான் வாயுவானது ''எரிமலைகளில்'' இருந்து வெளிப் படும் ஒரு வாயு ஆகும். எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே 'லா அகுலா' நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது, ரேடான் வாயுக் கசிவு மற்றும் தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. இதே போன்று ஜப்பானில் உள்ள ஹோன்சூ தீவில் 11.03.2011 அன்று நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவில் வரப்புகளை வெட்டியதை போன்று, சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உடைய மேடு பள்ள வளையங்கள் உருவாகி இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளைப் பதிவு செய்த, செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. அத்துடன் அந்த பகுதியில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, அதாவது 08.03.2011 அன்று, வளி மண்டலத்தில் வெப்ப நிலையானது, அசாதாரணமாக உயர்ந்து இருந்தது, வானிலை செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இது குறித்து விளக்கம் தெரிவித்த, நாசாவை சேர்ந்த டாக்டர் டிமிட்ரி ஒசானோவ் ,பூமிக்கு அடியில் இருந்து ரேடான் வாயு கசிந்து இருக்கலாம் என்றும், ரேடான் வாயுவானது, கதிரியக்கத் தன்மை உடையது என்பதால் அப்பகுதியில் இருந்த காற்றில் உள்ள எலெக்ட்ரான்களை, ரேடான் வாயு நீக்கி இருக்கலாம் என்றும், இந்த நிகழ்வானது ஒரு ''வெப்ப உமிழ்வு வினை'' என்பதால், வளி மண்டலத்தில் வெப்ப நிலை உயர்ந்து இருக்கிறது, என்று விளக்கம் தெரிவித்து இருக்கிறார். இதன் மூலம் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடித்ததாலேயே ஹோன்சூ தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது, தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படம் மற்றும் வானிலை செயற்கை கோள் படம், என இரண்டு விதமான ஆதாரங்கள் மூலம், சந்தேகத்திற்கு இடமின்றி, ஆணித் தரமாக நிரூபணமாகி இருக்கிறது. ooooooooooooooo சிசிடிவி கண்காணிப்புக் காமிரா மூலம் இந்தியாவைத்த தாக்க வரும் சுனாமியை ஒரு மணி நேரம் முன்னதாகவே அறியலாம். கடந்த2004 ஆம் ஆண்டு ,இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது,இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையத் தாக்கியது. இதே போன்று நூற்றி முப்பது ஆண்டுகளுக்கும் முன்பு,அதாவது, கடந்த ஆம் 1883 ஆண்டு, இந்தியக் கடற் கரைகளைத் தாக்கிய சுனாமி அலைகளானது, இந்தியக் கடற் கரைகளைத் தாக்குவதற்கு, ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பே,சுமத்ரா தீவுக்கு அருகில் அமைந்து இருக்கும்,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையைத் தாக்கியது. கடந்த காலத்தில் இரண்டு முறை நடைபெற்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடைபெறவும் சாத்தியம் இருக்கிறது.எனவே இது போன்ற நிகழ்வு, எதிர் காலத்தில் நடை பெறும் பொழுது அதனை ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே அறிய வேண்டும் என்றால்,அதற்கு,கிரேட் நிகோபார் தீவின் தென் பகுதிக் கடற் கரையில் அமைந்து இருக்கும்,கலங்கரை விளக்கத்தில்,கண்காணிப்புக் காமிராக்களைப் பொருத்தி,நேரலை செய்து இணையம் மூலம் கண்காணிக்கும் பொழுது,(குறிப்பாக சுமத்ரா தீவுக்கு அருகில் கடுமையான நில அதிர்ச்சி ஏற்படும் பொழுது) கிரேட் நிகோபார் தீவுக் கடற் கரையில்,சுனாமி அலைகள் வருவதைக்க கண்டு, உடனே,சுனாமி குறித்த எச்சரிக்கையை,இந்தியக் கடலோர மக்களுக்கு,ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தெரிவித்து, முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளச் செய்வதன் மூலம்,பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தைத் தவிர்க்கலாம். oooooooooooooo ஏழு ஆதாரங்கள் மூலம் எனது கண்டு பிடிப்பு நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் தளங்களும் கண்டங்களும் நிலையாக இருக்கிறது என்றும் கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களானது ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா போன்ற தீவுக்கு கண்டங்களுக்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததாலும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்தாலுமே இடம் பெயர்ந்து இருக்கின்றன என்று நான் உறுதியாகக் கூறுவதற்கு முக்கியமான ஏழு காரணங்ககளை இங்கு குறிப்பிடுகிறேன். 1- வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எல்லை பகுதியை வரையறை செய்ய இயலாத நிலையில் அந்தப் பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை பகுதி என்று அழைக்கப் படுகிறது.இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 2- இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுக்கிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் அந்த கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் பூமி உருவான காலத்தில் இருந்தே அந்த எரிமலைத் தொடர்பகுதியில் புதிய கடல் தளம் உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து இருக்க வில்லை என்பதுடன் கடல் தரையானது நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 3- கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பெய்யு இருப்பதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இந்த நிலையில் கடல் தரையின் மேல் குறிப்பாக பசிபிக் கடல் தரையின் மேல் வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு பசிபிக் கடல் தளமானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தரைக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கோருவதை போன்று உண்மையில் அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் அந்தக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவான கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருக்க வேண்டும்.ஆனால அவ்வாறு இல்லாமல் கரீபியன் தீவுக்கு கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருக்கிறது.இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கரீபியன் தீவுக் கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தரையானது நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.எனவே கியூபா தீவில் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 4- மேலும் அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிவார பகுதியில் பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரினத்தின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் மூலம் கொதிக்க கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.ஏனென்றால் புதை படிவங்களானது உலர்ந்து உருவாக காற்றும் வெய்யிலும் தேவை. 5- மேலும் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டதை ஒட்டியும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியும் உள்ள கடல் தரையில் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதன் மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் ட்ரைடான் டி குன்கா ,அசோர் மதீரா ஆகிய தீவுகளில் ஐரோப்பாவில் காணப் படும் தாரைவாழ் கதையான பேலியோ பேர்வேசா இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுவதன் மூலமாகவும் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அந்த கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்துக்கு மேலே தொடர்ச்சியாக இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. கடல் தரையின் மேலும் கண்டங்களின் மேலும் இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. தற்பொழுது கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,ஒரு விளக்கம் கூறப் படுகிறது.அதாவது கடல் தளமானது நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இந்த நிலையில் அந்த ஹைத்தி தீவில் சுனாமியை உருவாக்கிய நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுது உருவான நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் எரிமலைகளை சுற்றி உருவாகுவதை போன்று ,பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு சில சென்டி மீட்டர் உயரமும் தாழ்வும் உள்ள மேடுபள்ள வளையங்கள் உருவாகி இருந்தது தரை மட்ட மாறுபாடுகளை பதிவு செய்த செயற்கைக் கோள் படங்களில் பதிவாகி இருக்கிறது. இதன் மூலம் பூமிக்கு அடியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பே இரண்டரை லட்சம் மக்களின் உயிர்களைப் பறித்த ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் காரணம் என்பது செயற்கைக் கோள் பட ஆதாரத்தின் அடிப்படையில் இரண்டாவது முறையும் நிரூபணம் ஆகி இருக்கிறது. 0000000000000000000 கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்களானது ஆஸ்திரேலியா மற்றும் அண்டார்க்டிகா போன்ற தீவுக்கு கண்டங்களுக்கு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்ததாலும் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்தாலுமே இடம் பெயர்ந்து இருக்கின்றன என்று நான் உறுதியாகக் கூறுவதற்கு முக்கியமான ஏழு காரணங்ககளை இங்கு குறிப்பிடுகிறேன். 1- வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க ஆகிய கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதனால் அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் எல்லை பகுதியை வரையறை செய்ய இயலாத நிலையில் அந்தப் பகுதியானது வரையறுக்கப் படாத எல்லை பகுதி என்று அழைக்கப் படுகிறது.இதன் மூலம் கண்டங்களுக்கு இடையில் இருக்கும் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 2- இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் மத்திய பகுதியில் வடக்கு தெற்கு திசைகளை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர் நெடுகிலும் பூமிக்குள் இருந்து வெப்பமான பாறைக்கு குழம்பு மேற்பகுதிக்கு வந்து குளிர்ந்து இறுக்கிப் புதிய கடல் தளமாக உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் அந்த கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் புனித பீட்டர் மற்றும் புனித பால் தீவுகளின் பாறைகளின் தொன்மையானது நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளாக இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் பூமி உருவான காலத்தில் இருந்தே அந்த எரிமலைத் தொடர்பகுதியில் புதிய கடல் தளம் உருவாக்கி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து இருக்க வில்லை என்பதுடன் கடல் தரையானது நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 3- கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபா தீவில் பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பெய்யு இருப்பதன் மூலம் கரீபியன் தீவுக் கூட்டமானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இந்த நிலையில் கடல் தரையின் மேல் குறிப்பாக பசிபிக் கடல் தரையின் மேல் வட மேற்கு திசையில் இருந்து தென் கிழக்கு திசையை நோக்கி ஹவாய் எரிமலைத் தீவுகள் உருவாகி இருப்பதற்கு பசிபிக் கடல் தளமானது தென் கிழக்கு திசையில் இருந்து வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் கடல் தரைக்கு அடியில் இருக்கும் ஒரு எரிமலைப் பிழம்பால் தொடர்ச்சியாக துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர். அதே போன்று அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம் கூறுகின்றனர்.புவியியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதை போன்று உண்மையில் அட்லாண்டிக் கடல் தளமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருந்தால் அந்தக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் எரிமலைத் தீவான கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருக்க வேண்டும்.ஆனால அவ்வாறு இல்லாமல் கரீபியன் தீவுக்கு கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருக்கிறது.இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல் கரீபியன் தீவுக் கூட்டமானது கவிழ்த்துப் போட்ட ''ட ''வடிவில் உருவாகி இருப்பதன் மூலம் அட்லாண்டிக் கடல் தரையானது நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.எனவே கியூபா தீவில் டைனோசரின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்கள் பல்வேறு கண்டங்களிலும் தீவுகளிலும் காணப் படுவதற்கு டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்ததே காரணம் என்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 4- மேலும் அந்த கடலடி எரிமலைத் தொடரின் அடிவார பகுதியில் பேலியோ டிக்டின் என்று அழைக்கப் படும் கடல் உயிரினத்தின் புதை படிவங்களும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதால் மூலம் கொதிக்க கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.ஏனென்றால் புதை படிவங்களானது உலர்ந்து உருவாக காற்றும் வெய்யிலும் தேவை. 5- மேலும் அட்லாண்டிக் கடல் தரையின் மேல் குறிப்பாக தென் அமெரிக்கக் கண்டதை ஒட்டியும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தை ஒட்டியும் உள்ள கடல் தரையில் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதன் மூலம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இந்த நிலையில் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரின் உச்சிப் பகுதிகளாக இருக்கும் ட்ரைடான் டி குன்கா ,அசோர் மதீரா ஆகிய தீவுகளில் ஐரோப்பாவில் காணப் படும் தாரைவாழ் கதையான பேலியோ பேர்வேசா இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுவதன் மூலமாகவும் கடல் மட்டமானது பல்லாயிரம் அடிவரை தாழ்வாக இருந்து இருப்பதும் அதனால் அந்த கடலடி எரிமலைத் தொடரானது கடல் மட்டத்துக்கு மேலே தொடர்ச்சியாக இருந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலம் கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. இதே போன்று,கடல் தளத்தின் மேல், எரிமலைத் தொடர்கள் வரிசையாக உருவாகி இருப்பதற்கு,கடல் தளம் நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைப் பிளம்பால், கடல் தளமானது தொடர்ச்சியாகத் துளைக்கப் பட்டதே காரணம் என்று புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள். ஆனால், கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும்,அருகருகே உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒரே திசையை நோக்கி உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில், வெவ்வேறு திசையை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,கடல் தளமும் கண்டங்களும் நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது. உதாரணமாகப் பசிபிக் கடல் தரையின் மேல் உருவாகி இருக்கும் ஹவாய் எரிமலைத் தொடரும்,லைன் எரிமலைத் தொடரும்,லூயிஸ் வில்லி எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம் பசிபிக் கடல் தளம் நிலையாக இருப்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று அட்லாண்டிக் கடல் தரையின் மேல் இருந்து,ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும்,கானரி எரிமலைத் தொடரும்,கேமரோன் எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல்,வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி ,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருப்பதன் மூலம்,அட்லாண்டிக் கடல் தளமும்,ஆப்பிரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பது,ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. இதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தின் வட மேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த அனாகிம்,எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கின் எரிமலைத் தொடரும்,வேல்ஸ் கிரே எரிமலைத் தொடரும்,ஒன்றுக் கொன்று இணையாக ஒரே திசையை நோக்கி உருவாகாமல்,ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் வெவ்வேறு திசைகளை நோக்கி உருவாகி இருப்பதன் மூலமாகவும்,அட்லாண்டிக் கடல் தரையும் வட அமெரிக்கக் கண்டமும் நிலையாக இருப்பதும் ஆதாரப் பூர்வமாக நிரூபணமாகியுள்ளது. ஈரானுக்கு வட பகுதியில் உள்ள, உள் நாட்டுக் கடலான, காஸ்பியன் கடல் உருவானதற்கும், புவியியல் வல்லுனர்கள் ஒரு தவறான விளக்கத்தைத் தெரிவித்து இருக்கின்றனர். அதாவது இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள ஏழு கண்டங்களும் ஒன்றாக இணைந்து பாஞ்சியா என்று பெயர் சூட்டப் பட்ட, ஒரு சூப்பர் கண்டம் இருந்ததாகவும், அந்தப் பெருங் கண்டத்தைச் சுற்றி பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் நம்பப் படுகிறது. அதன் பின்னர் அந்தப் பாஞ்சியா சூப்பர் கண்டமானது லாரேசியா மற்றும் கோண்டுவானா என்ற இரண்டு காண்டங்களாகப் பிளவு பட்டுப் பிரிந்தாகவும், அதனால் அந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும், புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். பின்னர் அந்த இரண்டு கண்டங்களும் பிளவு பட்டுப் பிரிந்து நகர்ந்ததால், தற்பொழுது உள்ள கண்டங்கள் உருவாகி இணைந்த பொழுது, இடையில் சிக்கிக் கொண்ட டெதிஸ் கடல் பகுதியே, காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். ஆனால் காஸ்பியன் கடலில் உப்பின் அளவானது, பெருங் கடலில் இருப்பதை விட, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது.உள் நாட்டுக் கடலான காஸ்பியன் கடலில் லட்சக் கணக்கான ஆண்டு காலமாக பல ஆறுகள் பாய்ந்தாலும், காஸ்பியன் கடலின் மட்டம் உயர்ந்திருக்கவில்லை. காரணம் காஸ்பியன் கடலில் கலந்த ஆறுகளின் நீரானது, ஆவியாகி இருக்கிறது. குறிப்பாக ஆறுகளானது பாறைகளில் இருந்து உப்பைக் கரைத்துக் கொண்டு கடலில் கலந்த பிறகு, நீர் மாட்டும் ஆவியாகி விடுவதால்,ஆற்று நீரில் உள்ள உப்பானது , கடலிலேயே தங்கி விடுகிறது.எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது காலப் போக்கில் அதிகரித்து இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல், காஸ்பியன் கடலின் உப்பின் அளவானது, மற்ற கடல் நீரைக் காட்டிலும், மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருக்கிறது. எனவே காஸ்பியன் கடலின் உப்புத் தன்மையானது, மற்ற கடல் நீரை விட மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பதன் மூலம், கஸ்பியன் கடலானது, மற்ற கடல் பகுதியுடன் இணைந்து இருந்திருக்க வில்லை. என்பது நிரூபணமாகியுள்ளது. அத்துடன் காஸ்பியன் கடலானது உள்நாட்டுப் பகுதியிலேயே தனியாக உருவாகி இருப்பதும் நிரூபணமாகியுள்ளது. எனவே பாஞ்சியா என்ற சூப்பர் கண்டம் பிரிந்ததால் சிறிய கண்டங்கள் உருவாகி , நகர்ந்து மோதிக் கொண்டதால், இடையில் சிக்கிக் கொண்ட கடல் பகுதியாகக் காஸ்பியன் கடலாக உருவானது, என்று புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கம் தவறு. 00000000000000 மறுபடியும் ஒரு சின்ன பிளாஸ் பேக் கண்டங்களானது தனித் தனியாகக் கடல் தளங்களுடன் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படும் நிலையில் கண்டங்களுக்கு இதைப் பட்ட கடல் தரைப் பகுதியில் தொடர்ச்சியாக பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நில அதிர்ச்சிகள் ஏற்படாமல் இருப்பது நாசா வெளியிட்ட உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படம் மூலம் தெரிய வந்துள்ளது.இதன் மூலம் கடல் தரையானது தொடர்ச்சியாக இருப்பதுடன் கண்டங்களும் நிலையாக இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இந்த நிலையில் கடல் பகுதியைக் கடக்க இயலாத டைனோசர் போன்ற விலங்கினங்களின் புதை படிவங்களானது அண்டார்க்டிகா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற தீவுக்கு கண்டங்களில் காணப் படுவதற்கு டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் ஆதி வரை தாழ்வாக இருந்து இருப்பதுடன் கண்டங்களுக்கு இடையில் காடுகளுடன் கூடிய தரை வழித் தொடர்பு இருந்து இருப்பதுமே காரணம் என்பது நார்வே நாட்டுக் கடல் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் கண்டு பிடிக்கப் பட்ட பிளேட்டியோ சாரல் புதை படிவத்தின் மூலமாகவும் அதே போன்று இந்திய பெருங் கடலுக்கு அடியில் குறிப்பாகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர்ர்ர் ஆழத்தில் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலமாகவும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் கடலானது பூமிக்குள் இருந்து வந்திருப்பதும் நிரூபணம் ஆகி இருக்கிறது.இந்த நிலையில் கண்டங்களின் மேல் பாராளவாகக் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருப்பதன் மூலம் கண்டங்கள் எல்லா ஒரு காலத்தில் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுதுஇருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயர்ந்து இருப்பதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.அதே போன்று டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்த பொழுது கடலின் பரப்பளவு குறைவாக இருந்த பொழுது துருவப் பகுதிகளில் அதிக வெப்பம் நிலவி இருப்பதுடன் துருவப் பகுதிகளில் டைனோசர்களின் கூட்டம் வாழ்ந்த அடர்ந்த பசுமைக் காடுகள் இருந்து இருப்பதும் பின்னர் பனிப் படங்கள் உருவாகி இருப்பதும் டைனோசர் மற்றும் காடுகள் அழிந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது.இதன் மூலம் பூமியானது கடல் மட்ட உயர்வால் கடல் பரப்பளவில் அதிகரிப்பால் மூழ்கிக் கொண்டு இருப்பதும் வளிமண்டலத்தின் வெப்ப நிலையானது குளிர்ந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. பூமி விரிவடைந்து கொண்டு இருந்தாலும், ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து நானூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மடகாஸ்கர் தீவானது, ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் நிலையில்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பெரிய வகை நீர் யானைகளில் இருந்து பரிணாம வளர்ச்சி அடைந்த, கடல் பகுதியைக் கடக்க இயலாத குள்ள வகை நீர் யானைகளின் புதை படிவங்களானது, மடகாஸ்கர் தீவிலும்,மத்திய தரைக் கடலிலில் உள்ள சிசிலி,சைப்ரஸ் ,கிரிட்டி,மால்டா ஆகிய தீவுகளில் காணப் படுவதன் மூலம், இரண்டு கோடி ஆண்டுகளில் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. தற்பொழுது கண்டங்கள் எல்லாம் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக இரண்டாயிரம் அடி உயரத்திலேயே இருக்கும் நிலையில், இதே வேகத்தில் கடல் மட்டம் உயர்ந்தால், சில லட்சம் ஆண்டுகளிலேயே கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் மூழ்கி விடும். எனவே பூமியானது மூழ்கிக் கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 000000000000000 தற்பொழுது அறிவியல் உலகில் சில தீர்க்கப் படாத பிரச்சினைகள் இருக்கிறது.அதாவது சில புவியியல் நிகழ்வுகளுக்கு கண்டது தட்டு நகர்ச்சிக் கொள்கையின் அடிப்படையில் சரியான விளக்கத்தைக் கூற இயலாத நிலையில் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதால் அந்த நிகழ்வுகளுக்கான காரணம் புரிந்து கொல்லப் பட வில்லை. குறிப்பாக மத்திய தரைக்கு கடலில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய பவளத் திட்டுகள் எப்படி ஆழமான பசிபிக் கடல் பகுதியில் உருவாகியது. அதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய வரி அடுக்கு இரும்புப் படிவுகள் கண்டங்களின் மேல் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? அதே போன்று ஆழமற்ற கடல் பகுதியில் உருவாகி வளரக் கூடிய சுண்ணாம்புப் படிவுகள் கண்டங்களின் மேல் உருவாகி இருப்பதற்கு என்ன காரணம்? நிலத்தின் மேல் உருவாகக் கூடிய உப்புப் படிவுகள் கடலின் ஆழமான பகுதியில் காணப் படுவதற்கு காரணம் என்ன? கடல் பகுதியைக் கடக்க இயலாத விலங்கினங்கள் பல்வேறு கண்டங்களுக்கு எரிமலைத் தீவுகளுக்கும் சென்றது எப்படி? இது போன்று பல பிரச்சினைகள் விரிவடையும் பூமி விளக்கத்தின் மூலம் எளிதாக விளக்கம் கூற முடிகிறது. அவற்றை ஒவொன்றாக காணலாம். 00000000000 பவளத் திட்டுகள் பவளத் திட்டுகள் ஆழமற்ற கடல் பகுதியிலேயே வாழும்.ஏனென்றால் பவளத் திட்டை உருவாக்கும், பவளம் என்று அழைக்கப் படும், குண்டூசித் தலை அளவு உள்ள உயிரினமானது, ஒரு பூவின் வடிவில் இருக்கும். அதன் இதழ்கள் அசையும் பொழுது, அதனுள் செல்லும் நுண்ணுயிரிகளை உண்டு, பவளங்கள் உயிர் வாழும்.அத்துடன் பவளங்கள் உடலில் ஒரு வகை பாசிகளும் உயிர் வாழ்கின்றன. அந்த பாசிகளானது சூரிய ஒளியின் உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து சர்க்கரையை தயாரிக்கிறது.பவளங்கள் அந்த சர்க்கரையையும் பயன் படுத்திக் கொள்கிறது.இவ்வாறு பவளங்கள் பாசிகளை சார்ந்து வாழ்வதால் பவளங்கள் பெரும் பாலும் சூரிய ஒளி புகக் கூடிய ஆழம் குறைந்த கடல் பகுதியிலேயே வாழும்.அத்துடன் பவளங்கள் தங்கள் உடலை பாதுகாத்துக் கொள்ள சுண்ணாம்புப் பொருட்களை சுரக்கின்றன.பவளங்கள் இறக்கும் பொழுது அந்த சுண்ணாம்புப் பொருட்களானது, கடல் தரையில் படிகின்றன. அதன் மேல் புதிய தலை முறை பவளங்கள் வாழும்.இவ்வாறு தொடர்ந்து நடை பெறுவதால், கடல் தரையில் பவளத் திட்டுகள் உருவாகி வளர்கின்றன. இதனால் கடல் மட்டம் உயர உயர பவளத் திட்டுகளும் உயர்வதால், அதன் மேல் பவளங்கள் இறக்காமல் பல லட்சம் ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன.அத்துடன் பவளத் திட்டுகளும் பல நூறு அடி உயரத்திற்கு வளர்ந்து காணப் படுகின்றன. பசிபிக் கடலில் உள்ள பல எரிமலைகளைச் சுற்றிலும் பவளத் திட்டுகள் வளர்கின்றன.சில சமயம் கடல் மட்ட உயர்வால் எரிமலைகள் மூழ்கினாலும், அதன் மேல் பவளத் திட்டுகள் தொடர்ந்து வளர்கின்றன. இதனால் பல பவளத் திட்டுத் தீவுகள் உருவாகி இருக்கின்றன.இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பல பவளத் திட்டுகள் இன்று கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுகின்றன. இது போன்ற மூழ்கிய பவளத் திட்டுகள், ''குயாட்டுகள்'' என்று அழைக்கப் படுகின்றன. பசிபிக் கடலுக்கு அடியில் காணப் படும் கடலடி பவளத் திட்டுகள் ( குயாட்டுக்கள் ). விக்கி பீடியாவில் உள்ள விபரங்கள் . ரிசல்யூசன் குயாட் பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4330 அடி ஆழத்தில் உள்ள பவளத் திட்டு. அதில் இருந்த படி வுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில், பத்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த குயாட் கடல் மட்டத்துக்கு மேலே இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் உச்சிப் பகுதியில் தாவரங்களின் பாகங்கள் அடையாளம் காணப் பட்டு உள்ளது.மரங்கள் மற்றும் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின் குயாட் டார்வின் குயாட்டின் உச்சிப் பகுதியானது பசிபிக் கடல் மட்டத்தில் இருந்து 4150 அடி ஆழத்தில் உள்ளது .அதில் டைனோசர்களின் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ''ரூடிஸ்ட்'' என்று அழைக்கப் படும் கடல் வாழ் மெல்லுடலியின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுஉள்ளது. இந்த ரூடிஸ்ட் மெல்லுடலியானது பவளங்களைப் போலவே சுண்ணாம்புத் திட்டை உருவாக்கக் கூடியது. டார்வின் குயாட்டானது பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. ஆலிசன் குயாட். டயமண்ட் வடிவ சமதள மலை .கடல் தரையில் இருந்து 1500 மீட்டர் உயரத்திலும், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் ஆழத்திலும் அமைந்து இருக்கிறது. பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதலையின் பற்கள் இந்த கடலடி சம தள மலையின் மேல் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆலிசன் குயாட்டானது கடல் மட்டத்துக்கு மேலேதீவாக இருந்து இருப்பது தெரிய வந்துள்ளது.அதன் உச்சியில் மழை நீரால் துளையிடப் பட்ட குழிகளுடன் கார்ஸ்ட் நில அமைப்பு உருவாகி இருக்கிறது.தாவரங்களின் வேர்கள் காணப் பட்டுள்ளது.சூடு நீர் ஊற்றுக்களும் காணப் படுகிறது. எனிவீடாக் குயாட். வட்ட வடிவில் உள்ள பவள திட்டு தற்பொழுது 4600 அடி ஆழத்தில் உள்ளது.ஒரு கடலடி மலை மேல் உருவாகி இருக்கிறது. இந்த கடலடி பவளத் திட்டை துளையிட்ட பொழுது 4150 அடி வரைக்கும் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது.அ தன் அடியில் எரிமலைப் பாறைகள் இருப்பது தெரிய வந்துள்ளது. கேப் ஜான்சன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 5500 அடி ஆழத்தில் உள்ளது.கடல் தரையில் இருந்து 10,000 அடி உயரமுள்ளது.உச்சியில் சுண்ணாம்பு படிவுகள் உள்ளது.பவளத் திட்டு வடிவில் உருவாகி இருக்கிறது. அதன் உச்சியில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த ரூடிஸ்ட் உயிரினத்தின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. ஹாரிசன் குயாட்.. கடல் மட்டத்தில் இருந்து 3.4 கிலோ மீட்டர் உயரமுள்ளது.கடல் மட்டத்தில் இருந்து 4730 அடி ஆழத்தில் உள்ளது.சுண்ணாம்புத் திட்டு காணப் படுகிறது.ஒரு காலத்தில் எரிமலைத் தீவாக இருந்திருக்கிறது.. அதில் தாவரங்கள் வளர்ந்து இருக்கின்றன. டார்வின்,ஆலிசன்,ரிசல்யூசன்,ஹாரிசன்,குயாட்டுக்கள் எல்லாம் மத்திய பசிபிக் கடலடி பீட பூமிப பகுதியில் உருவாகி இருக்கின்றன. கிரெட்டெ சியஸ் காலத்தில் ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவான சுண்ணாம்புத் திட்டுகள் இந்த குயாட் மேல் காணப் படுகிறது.அதன் அடிப்படையில் இந்த குயாட்டுகள் கிரெட்டெ சியஸ் காலத்தில் மூழ்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த சுண்ணாம்பு படிவுகளில் மகரந்த துகள் களின் படிவுகள் காணப் பட்டது. இந்திய பெருங் கடலில் உள்ள மாலத் தீவுக் கூட்டத்தில் உள்ள மாலே பவளத் திட்டை ரைஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த, டாக்டர் ஆண்டிரூஸ் டராக்ஸ்லர் துளையிட்டு ஆய்வு செய்த பொழுது, இரண்டு கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் சுண்ணாம்புப் பாறைகள் இருப்பது தெரியவந்துள்ளது. இதன் மூலம் கடல் மட்டமானது இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இதே போன்று கரீபியன் கடல் பகுதியில் உள்ள, பஹாமா சுண்ணாம்புத் திட்டானது, கடல் தரையில் இருந்து ''எட்டு கிலோ மீட்டர் உயரத்திற்கு'' வளர்ந்து இருக்கிறது. இதன் மூலம் கடல் மட்டமானது, எட்டு கிலோ மீட்டர் வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. கண்டங்களின் மேல் காணப் படும் பவளத் திட்டுகள். வட அமெரிக்கக் கண்டத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் உள்ள, கிரேட் ஏரியை சுற்றிலும், சிலூரியன் காலத்தில் அதாவது நாற்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, ஆழமற்ற கடல் பகுதியில் உருவான பவளத் திட்டுகள் காணப் படுகிறது. இதே பகுதியில் பூமிக்கு அடியில் ஒரு காலத்தில் கண்டங்களின் மேல் இருந்த கடலால் படிய வைக்கப் பட்ட, உப்புப் பாறைகள் காணப் படுகின்றன . அதே போன்று வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கான்சாஸ் மாகாணத்திலும் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் ஏராளமாகக் காணப் படுவதுடன், ஆழமற்ற கடல் பகுதியில் உருவான, சுண்ணாம்புப் படிவப் பாறைகளும் காணப் படுகின்றன. அதே போன்று, வட அமெரிக்காவில் உள்ள டெக்ஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள, குடாலூப் மலையின் மேல் 200 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட சுண்ணாம்புத் திட்டும் காணப் படுகிறது. . அதே டெக்ஸ்சாஸ் பகுதியில் பல கிலோ மீட்டர் சுற்றளவில் காணப் படும் டெலெவார் பேசின் பகுதியை சுற்றிலும், பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டும் காணப் படுகிறது. ரூடிஸ்ட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் ட்ரைலோ பைட் புதை படிவங்கள் காணப் படும் இடங்கள் இவ்வாறு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த கடல் உயிரினங்களால் உருவாக்கப் பட்ட பவளத் திட்டுகள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் ஆடி ஆழத்தில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டமானது பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பது ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. அதே போன்று கண்டங்களின் மேலும் பவளத் திட்டுகள் காணப் படுவதன் மூலம் கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. இவ்வாறு ஆழம் குறைந்த பகுதியில் வளரக் கூடிய பவளங்கள் கடலுக்கு அடியில் பல்லாயிரம் அடி ஆழத்தில் காணப் படுவதுடன்,பவளத் திட்டுகள் கண்டங்களின் மேலும் பரவலாக்க காணப் படுவதன் மூலம் கண்டம் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதுடன் கண்டங்களும் கடலுக்கு அடியில் இருந்து தற்பொழுது இருக்கும் உயரத்திற்கு உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. இதன் மூலம் பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகி இருக்கிறது. 0000000000000000 மத்திய தரைக் கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி? ராட்சத உப்புப் படிவப் புதிர். குறிப்பாக, மத்திய தரைக் கடலை சுற்றி அமைந்து இருக்கும் ஸ்பெயின் ,இத்தாலி,சிசிலி,கிரிட்டி,சைப்ரஸ்,துருக்கி,மொராக்கோ போன்ற நாடுகளின் கடற் கரையோரத்தில் முப்பது நாற்பது அடி உயரத்திற்கு,ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பதற்கான காரணத்தை அறிய, நூற்றுக்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், தீவிர ஆராய்ச்சியில் ஈடு பட்டு வருகின்றனர். ஆனால் இன்று வரை யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. பொதுவாக நாம் சமையலுக்கு பயன் படுத்தும் உப்பானது கடற் கரையோரத்தில் வரப்புகளை போன்று நிலத்தில் பாத்தி கட்டி அதில் கடல் நீரை பாய்ச்சி அந்த நீர் ஆவியான பிறகு, சில அங்குல உயரத்திற்கு படியும் உப்பை சேகரித்து பயன் படுத்துகிறோம். இந்த முறையில் வெப்ப மண்டலப் பகுதிகளிலேயே உப்பை பெற முடியும். ஆனால் குளிர் பிரதேசமான ஐரோப்பாக் கண்டத்தில் ருமேனியாவில் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பழங்குடிகள் ஊற்று நீரை காய்ச்சி உப்பை பிரித்து எடுத்து பயன் படுத்தினார்கள். அதே போன்று வட கடல் பகுதியில் பிடிக்கப் பட்ட காட் மீன்களை பதப் படுத்த ஆஸ்திரியா வியாபாரிகள் நிலத்திற்கு அடியில் பல நூறு அடி ஆழத்தில் உருவாகி இருக்கும் ராட்சத உப்பு பாறைகளை சுரங்கம் அமைத்து வெட்டி எடுத்து பயன் படுத்தினார்கள். இது போன்ற நிலத்தடி உப்புப் படிவங்கள் எல்லாக் கண்டங்களிலும் காணப் படுகிறது.பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு கண்டங்களின் மேல் இருந்த கடல் நீரானது பிளவுகள் வழியாக பூமிக்குள் இறங்கிய பிறகு அந்த நீரானது ஆவியானதால் நிலத்திற்கு அடியில் உப்புப் படிவங்களாக உருவாகி இருக்கின்றன . இது போன்று பல முறை கண்டங்களின் மேல் கடல் நீர் வந்து சென்றதால், நிலத்திற்கு அடியில் ராட்சத உப்புப் பாறைகள் உருவாகி இருக்கின்றன. அதேபோன்று மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் அமைந்து இருக்கும் இத்தாலி நாட்டில் அப்பென்னிஸ் மலையின் மேல் முப்பது அடி உயரத்திற்கு ஜிப்சம் உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.கடல் நீர் ஆவியாகும் பொழுது முதலில் பிரியும் உப்பே ஜிப்சம் ஆகும். மத்திய தரைக்கு கடலில் ராச்சத உப்புப் படிவங்கள் உருவானது எப்படி இந்த நிலையில் ஐந்து கிலோ மீட்டர் சராசரி ஆழம் உடைய மத்திய தரைக் கடலுக்கு அடியில் குழாய்களை செலுத்தி, துளையிட்ட பொழுது, மத்திய தரைக் கடலுக்கு அடியில் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு ராச்சத உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகமே ஆச்சரியம் அடைந்தது. சில இடத்தில் மூன்று கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்புப் படிவங்கள் உருவாகி இருப்பது தெரிய வந்ததும் அறிவியல் உலகம் அடைந்த ஆச்சர்யத்திற்கு அளவே இல்லை. கடல் நீரில் முப்பத்தி ஐந்து சதவீதம் உப்பு இருக்கிறது அதாவது ஒரு லிட்டர் கடல் நீரை ஆவியாக்கினால் அதில் இருந்து மூன்றரை கிராம் உப்பு கிடைக்கும்.அதே போன்று ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு உப்பு படிவம் உருவாக வேண்டும் என்றால் அறுபத்தி ஐந்து கிலோ மீட்டர் உயரத்திற்கு கடல் நீர் இருக்க வேண்டும். ஆனால் உலக அளவில் கடலின் சராசரி ஆழமே நான்கு கிலோ மீட்டர்தான். தற்பொழுது மத்திய தரைக் கடல் ராச்சத உப்புப் படிவ புதிரை விடுவிக்க ஆராய்ச்சியாளர்கள் இரண்டு விளக்கங்களை கூறுகின்றனர். பெரிய ஆவியாதல் விளக்கம். குறிப்பாக மத்திய தரைக் கடலுக்கு வடக்கில் ஐரோப்பாக் கண்டமும்,கிழக்கில் ஆசியாக் கண்டமும்,தெற்கில் ஆப்பிரிக்கக் கண்டமும் அமைந்து இருக்கிறது. மேற்கில் அட்லாண்டிக் பெருங் கடல் இருந்தாலும் அட்லாண்டிக் கடலும் மத்திய தரைக் கடலும் சுவர் போன்ற தடுப்பால் பிரிக்கப் பட்டு இருக்கிறது. ஆனாலும் மேல் பகுதியில் மட்டும் ஆயிரம் அடி ஆழமும் நூற்றி நாற்பது கிலோ மீட்டர் அகலமும் உள்ள ஜிப்ரால்டர் நீரிணைப்பால் இணைக்கப் பட்டு இருக்கிறது. குறிப்பாக மத்திய தரைக் கடலானது சகாரா பாலை வனத்துக்கு வடக்கில் அமைந்து இருக்கிறது.அதனால் அந்த பகுதியில் வெப்பமும் அதிகம்.அதனால் மத்திய தரைக் கடலில் இருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகம்.ஆனால் அதனை ஈடு செய்ய, ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூலம் அட்லாண்டிக் கடலில் இருந்து , மத்திய தரைக் கடலுக்கு தொடர்ந்து நீர் வருகிறது.அதே போன்று சில சமயம் மத்திய தரைக் கடலில் இருந்தும் நீர் அட்லாண்டிக் கடலுக்கும் வருகிறது. இந்த நிலையில் மத்திய தரைக் கடல் சுற்றுப் பகுதியில் ராட்சத உப்புப் படிவங்களின் தொன்மையை மதிப்பிட்டதில் அந்த உப்புப் படிவங்களானது அறுபது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி ஐம்பத்தி ஐந்து லட்சம் ஆண்டு காலத்தில் உருவாகி இருப்பது தெரிய வந்தது. அதாவது ஐம்பது லட்சம் ஆண்டுகளில் அந்த உப்பு படிவங்கள் உருவாகி இருக்கிறது. அப்படி என்றால் அந்த காலத்தில் மத்திய தரைக்கு கடலுக்கு வரும் நீரை விட ஆவியாகும் நீரின் அளவு அதிகமாக இருக்க வேண்டும்.அப்படி என்றால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு மூடப் பட்டு இருக்க வேண்டும் அதற்கு கண்டங்கள் நகர்ச்சி காரணமாக இருந்து இருக்க வேண்டும் என்று நம்பப் படுகிறது .அப்பொழுது மத்திய தரைக் கடல் நீரானது முழுவதும் ஆவியாகி இருக்க வேண்டும்.அதன் பிறகு மறுபடியும் கண்டங்களின் நகர்ச்சியால் ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்த பிறகு, ஆவியாகும் நீரை விட அதிக அளவில் நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும். அதாவது லட்சக் கணக்கான ஆண்டுகள் நீர் ஆவியான பிறகு இரண்டே ஆண்டுகளில் மத்திய தரைக் கடலில் நீர் நிறைந்து இருக்க வேண்டும்.அதற்கு நயாகரா நீர் வீழ்ச்சியைப் போல பல மடங்கு அதிகமான அளவுக்கு நீர் மத்திய தரைக் கடல் பகுதிக்குள் வந்து இருக்க வேண்டும் என்று கருதப் பட்டது. ஆனால் ராட்சத உப்புப் படிவங்கள் உருவாகி வேண்டும் என்றால் இது போன்று 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியம் இருக்க வேண்டும்.இவ்வாறு 17 முறை ஜிப்ரால்டர் நீரிணைப்பு திறந்தும் மூடியும் இருக்க எத்தகைய நிகழ்வு காரணமாக இருக்க முடியும் என்ற கேள்விக்குத்தான் யாராலும் உறுதியான விளக்கத்தைக் கூற இயல வில்லை. முக்கியமாக மத்திய தரைக் கடல் முழுவதும், 17 முறை ஆவியாக வேண்டும் என்றால் அதற்கு வெப்ப நிலையும் அதீதமாக உயர்ந்து இருக்க வேண்டும். அப்படி ஒரு அதீத நிகழ்வு நடந்ததற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. 0000000000000 வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானது எப்படி? வரிப் பட்டை இரும்பு படிவுகள் சுண்ணாம்பை போலவே, நாம் பயன் படுத்தும் இரும்பில் அறுபது சதவீதம், ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்து மடிந்த, கடல் நுண்ணுயிரிகளால் உருவாக்கப் பட்டு, இன்று உலகில் பல பகுதிகளில், பல நூறு அடி உயரத்திற்கு இரும்பு படிவுகளாக காணப் படுகிறது. குறிப்பாக ஆழமற்ற கடல் பகுதியில் சூரிய ஒளி உதவியுடன் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத்த தயாரிக்கும் நீலப் பசும் பாசிகளானது ஆக்சிஜனை வெளிவிடுகிறது. இந்த ஆக்சிஜனானது கடல் நீரில் கலந்து இருக்கும் இரும்பு அயனிகளுடன் சேர்ந்து இரும்பு ஆக்ஸைடு உருவாகிறது.நீரில் கரையாத தன்மை உடைய இரும்பு ஆக்ஸைடானது, கடல் தரையில் பல நூறு கிலோ மீட்டர் பரப்பளவில் படிகிறது. இவ்வாறு உருவாகும் இரும்பு படிவுகளானது, வரிப் பட்டை இரும்பு படிவம் என்று அழைக்கப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் காணப் படும் இரும்பு படிவமானது, மூவாயிரம் அடி உயரத்துடன், மலையை போன்று உருவாகி இருக்கிறது. தற்பொழுது வரிப் பட்டை இரும்பு படிவங்களானது 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. அதன் பிறகு 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது.அதன் பிறகு 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு அதிக அளவில் உருவாகி இருக்கிறது. 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலில் அதிக அளவில் ஆக்சிஜன் இருந்ததாக நம்பப் படுகிறது.அதன் பிறகு கடலில் உயிரினங்கள் பெரும் அளவில் தோன்றி ஒளிச் சேர்க்கை செய்து ஆக்சிஜனை வெளியிட்டதால் வளி மண்டலத்திலும் கடலிலும் ஆக்சிஜன் அளவு அதிகரித்ததாக நம்பப் படுகிறது. இந்த நிலையில் 55 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவானதற்கு பனிப் பந்து பூமியே காரணம் என்று நம்பப் படுகிறது. அதாவது பூமியெங்கும் பனி மூடப் பட்டு இருந்ததால், கடலில் அதிக அளவு இரும்பு சேர்ந்ததாகவும் இந்த நிலையில் பனி படலங்கள் உருகியதால், வளி மண்டலத்தில் இருந்த ஆக்சிஜன் கடலில் கலந்ததால், இரும்புப் படிவுகள் உருவானதாகவும் நம்பப் படுகிறது. எனது விளக்கம் கடல் நீரானது பூமிக்குள் சுரந்த நீரானது உடு நீர் ஊற்றுக்கள் மூலம் வெளி வந்து திரண்டதால் உருவானது.சூடு நீர் ஊற்று நீரில் அதிக அளவு இரும்பு இருக்கிறது.அதனால் கடல் உருவான காலத்தில் இரும்பு படிவுகள் அதிக அளவில் உருவாகின.அதன் பிறகு கடல் மட்டமும் கண்டங்களும் மாறி மாறி உயர்ந்த பொழுது, கடல் நீரானது கண்டங்களுக்கு மேலே வந்த பொழுது, மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாகின. அதன் பிறகு கண்டங்கள் உயர்ந்தன. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால் சூடு நீர் ஊற்றுகள் மூலம் வெளிவந்த நீரில் இருந் இரும்பு அயனிகளானது, ஆழம் அதிகமாக இருந்த கடலில் கலந்ததால், மறுபடியும் வரிப் பட்டை இரும்பு படிவுகள் உருவாக வில்லை.அதாவது ஆதி காலத்தில் கடல் ஏரிகளே இருந்தன. பின்னர் கடல் ஏரிகள் ஒன்றாக இணைந்ததால் கடல் உருவானது. அத்துடன் கண்டங்கள் உயர்ந்ததால் கடல் ஆழமானது.இவ்வாறு கடல் மட்டமும் கண்டங்களும் உயராமல் இருந்த காலத்தில், பூமியானது தற்பொழுது இருக்கும் அளவை விட மிகவும் சிறிய அளவிலும், சம தளத்துடனும் இருந்தது. பூமியானது சிறிய அளவில் இருந்ததால், துருவப் பகுதிகளில், அதிக அளவில் சூரிய ஒளி விழுந்தது.அதனால் துருவங்களில் காடுகளும் அதில் விலங்கினங்களும் வாழ்ந்தன. பூமியின் அளவு பெரிதாகியதால் துருவங்களில் விழும் சூரிய ஒளியின் அளவும் குறைந்தது.அதனாலும் துருவங்களில் பனிப் படலங்கள் உருவானது. ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த மெல்லுடலிகளின் புதை படிவங்கள் முதன் முதலில் ஆஸ்திரேலியாக் கண்டத்தின் தென் பகுதியில் உள்ள எடியாக்காரா மலைப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே வகை உயிரினங்களின் புதை படிவங்கள் பல இடங்களில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அந்தப் புதை படிவங்கள் எல்லாம் எடியாக்காரா புதை படிவங்கள் என்றே அழைக்கப் படுகின்றன. எடியாக்காரா காலத்தில் மொத்தம் ஐம்பதுக்கும் குறைவான இனவகை உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன. அதன் அடிப்படையில் நான், கண்டங்கள் எல்லாம் கடலுக்கு அடியில் இருந்து, கடல் மட்டத்துக்கு மேலாக உயர்ந்து இருக்கின்றன என்று விளக்கம் தெரிவித்து இருந்தேன். அதே போன்று கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில், டைனோசர் மற்றும் மரங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டதன் அடிப்படையில், கடல் மட்டமானது, இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்து, உயர்ந்து இருப்பதாகவும் விளக்கம் கூறினேன். ஆனால் ஐம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, கண்டங்களின் மேல் உருவான ,இரும்புப் படிவுகளுக்கு பனிப் பந்து பூமி விளக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முதல் பனிப் பந்து பூமி முதலில் எடியாக்காரா காலத்தில்தான் மெல்லுடலிகள் கடினமான ஓடுகளைச் சுரந்து உடலைப் பாதுகாத்தால் அதன் புதை படிவங்கள் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனாலும் பூமியில் உயிரினங்கள் முன்னூறு கோடி ஆண்டிகளுக்கு முன்பே தோன்றி இருப்பதற்கு ஆதாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. எடியாக்காரா காலத்திற்கு முன்பு, அதாவது அறுபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் கிலோ மீட்டர் உயரத்திற்கு, பனியால் மூடப் பட்டு இருந்ததாக நம்பப் படுகிறது. இந்தக் கால பூமியானது பனிப் பந்து பூமி என்று அழைக்கப் படுகிறது. பனிப் பந்து பூமி பல முறை ஏற்பட்டு இருக்கிறது?! வட அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் 250 கோடி முதல் 220 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் படிய வைக்கப் பட்ட படிவுகள் காணப் படுவதற்கும் அந்த காலத்தில் பூமியெங்கும் பனிப் படிவுகளால் மூடப் பட்டு இருந்ததாகவும் பின்னர் உருகி பனியாறுகள் நகர்ந்தாள் கடலில் கலந்ததால் கடல் மட்டமானது திடீரென்று உயர்ந்து கண்டங்களின் மேலே வந்து சென்ற பொழுது ஆழமற்ற கடலால் படியவைக்கப் பட்டதாகவும் நம்பப் படுகிறது. அதாவது ஆராய்ச்சியாளர்கள் கண்டங்களும் கடல் மட்டமும் தற்பொழுது இருக்கும் உயரத்திலேயே எப்பொழுதும் இருந்திருப்பதாக நம்புகின்றனர். அதனால்தான் கண்டங்களின் மேல் காணப் படும் படிவுகளுக்கு, கடல் நீர் கண்டங்களின் மேல் வந்ததற்கு, பனிப் பந்து பூமி கற்பனை விளக்கத்தைக் கூறுகின்றனர். உண்மையில் கண்டங்களும் கடல் மட்டமும் பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது.அப்பொழுது கடல் மட்டம் உயரும் பொழுது, கண்டங்களின் மேலே கடல் வருகிறது. அப்பொழுது கடல் உயிரினங்களால் படிவுகள் உருவாகுகின்றன. அதன் பிறகு கண்டங்கள் உயரும் பொழுது, படிவுகள் இறுகிப் படிவுப் பாறைகளாக உருவாக்குகின்றன. இவ்வாறு கண்டங்களும் கடல் மட்டமும் உயர்வதால், பூமியானது விரிவடைந்து கொண்டு இருப்பது தெளிவாக நிரூபணம் ஆகிறது.இன்னும் சொல்லப் போனால் பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து இருக்கின்றனர்.இவ்வாறு பூமியின் மையப் பகுதி, பெருக்கமடைந்து கொண்டு இருப்பதால், பூமியின் மேற்பரப்பானது உயர்கிறது. அதே போன்று பிளவு பட்டுப் பிரிந்து விரிவடைகிறது.அதனால் கிராண்ட் கன்யன் போன்ற பிளவுப் பள்ளத் தாக்குகள் உருவாகுகின்றன. சுண்ணாம்பு மலை உருவானது எப்படி குறிப்பாக தென் அமெரிக்கா கண்டத்தில் பிரேசில் பகுதியிலும் அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு அருகிலும் அட்லாண்டிக் கடலுக்கு அடியில் ராட்சத உப்புப் படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது. முக்கியமாக மத்திய தரைக் கடலுக்கு அடியில் எரடோஸ்தெனிஸ் என்ற விஞ்ஞானியின் பெயரால் அழைக்கப் படும் ஒரு ''சுண்ணாம்பு மலை'' உருவாகி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த சுண்ணாம்பானது ஆழமற்ற கடல் பகுதியில் வாழ்ந்த நண்டு, நத்தை, சிப்பி, கிளிஞ்சல் போன்ற கடல் உயிரினங்கள் இறந்த பிறகு, அதன் உடலில் இருந்து சுண்ணாம்புப் பொருட்கள், கடல் தரையில் படித்ததால் உருவான மலை ஆகும்.இதன் மூலம் மத்திய தரைக் கடலானது, பல்லாயிரம் அடி வரை தாழ்வாக இருந்து உயர்ந்து இருப்பதும் ஆதார பூர்வமாக நிரூபணம் ஆகிறது. 00000000000000 எப்படி உருவானது கல் மரப் பூங்கா? காஸ்பியன் கடல் எப்படி உருவானது ? அதே போன்று கண்டங்கள் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறப் படுவதும் தவறு.என்பதும் ,கண்டங்கள் நிலையாக இருக்கும் நிலையிலேயே காஸ்பியன் கடலானது உள் நாட்டுப் பகுதியிலேயே உருவாகி இருப்பது, அதன் வேறுபட்ட உப்புத் தன்மை மூலம் நிரூபணமாகிறது.அதே போன்று இன்னொரு பிரச்சினைக்கும் தீர்வு. எப்படி உருவானது கல் மரப் பூங்கா? டைனோசர்களின் காலத்தில் வளர்ந்த ஒரு மரமானது கல்லாக மாறி இருப்பது, காட்சிக்காக வைக்கப் பட்டு இருக்கிறது. அதே போன்று, வட அமெரிக்கக் கண்டத்தின் தென் மேற்குப் பகுதி மாகாணமான அரிசோனாவில்,அறுநூறு கிலோ மீட்டர் பரப்பளவில் ஏராளமான கல் மரங்கள் காணப் படுகின்றன. இந்தப் பகுதியானது கல்மரப் பூங்கா என்று அழைக்கப் படுகிறது. தற்பொழுது,வறண்ட பாலை வானமாகத் தென்படும் கல் மரப் பூங்காப் பகுதியில்,கயோட்டி என்று அழைக்கப் படும் ஓநாய்கள்,பாம்புகள்,சிறிய ஊர்வன வகைப் பிராணிகள் காணப் படுகின்றன.ஆனால்,இந்தப் பகுதியில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வாழ்ந்த,பைட்டோ சாராஸ் என்று அழைக்கப் படும் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கு மற்றும் தவளைகளின் புதைப் படிவங்களும்,கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இந்தக் கால கட்டத்தில்தான்,டைனோசர்கள் முதலை போன்ற ஊர்வன வகை விலங்கினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்றதால்,ஆதி கால டைனோசர்கள் போன்ற விலங்கினங்களின் புதைப் படிவங்களும், இந்தப் பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. அதன் அடிப்படையில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,கல் மரப் பூங்காவானது,வெப்ப மண்டலக் கால நிலை நிலவக் கூடிய பகுதிகளில் காணப் படும், சதுப்பு நிலக் காடாக,ஆறுகளுடன் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.எனவே சதுப்பு நிலக் காடானது, வறண்ட பாலை வனமாக மாறியதற்கு காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது. இந்தக் கேள்விக்குத் தற்பொழுது புவியியல் வல்லுனர்கள்,கண்டத் தட்டு நகர்சிக் கொள்கையின் அடிப்படையில்,விளக்கம் கூறுகின்றனர். அதாவது,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,வட அமெரிக்கக் கண்டமானது,தற்பொழுது இருக்கும் இடத்தில் இருந்து இரண்டாயிரம் கிலோ மீட்டர் தெற்கே,இருந்ததாகவும்,அதனால் ,அரிசோனா பகுதியானது,அதிக வெப்ப நிலை நிலவக் கூடிய,பூமத்திய ரேகைக்கு அருகில் இருந்ததாகவும்,அதன் பிறகு,வட அமெரிக்கக் கண்டமானது,வடக்கு திசையை நோக்கி நகர்ந்ததால்,அரிசோனா பகுதியானது,மித வெப்ப மண்டலப் பகுதிக்கு வந்து விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். அத்துடன்,காட்டாறு வெள்ளத்தால்,மரங்கள் வேருடன் பிடுங்கப் பட்டு அடித்துக் கொண்டு வரப் பட்டதாகவும்,அந்த நீரில் ,அந்தப் பகுதியில் சீறிய எரிமலைகளின் சாம்பல் இருந்ததாகவும்,அந்த சாம்பலில் இருந்த சிலிக்கன் டை ஆக்சைடு, நீரில் கரைந்த நிலையில்,மண்ணுக்குள் புதைந்து கிடந்த மரங்களுக்குள் இறங்கியதால்,காலப் போக்கில் கல் மரங்களாகி விட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். குறிப்பாகக் கல்மரப் பூங்காவானது,கொலராடோ பீட பூமிப் பகுதியில் அமைந்து இருக்கிறது.அதன் அடிப்படையில்,ஆறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்த நிலப் பகுதியானது உயர்ந்ததாகவும்,அப்பொழுது உயர்ந்த நிலப் பகுதியானது, அதிக அளவில் அரிக்கப் பட்டதாகவும்,அதனால் கல் மரங்கள் வெளிப் பட்டதாகவும்,புவியியல் வல்லுனர்கள் விளக்கம் கூறுகின்றனர். கடல் மட்டம் தாழ்வாக இருந்த பொழுது அரிசோனா பகுதியில் அதிக வெப்ப நிலை நிலவி இருந்திருக்கிறது. அதன் பிறகு கடல் மட்டம் உயர்ந்ததால்,கடலின் பரப்பளவும் அதிகரித்ததால்,வளி மண்டலத்தின் வெப்ப நிலையும் குறைந்ததால்,அரிசோனா பகுதியில்,மித வெப்பக் கால நிலையாக மாறி இருக்கிறது. இந்தப் பகுதியில் தற்பொழுது,குளிர் காலத்தில்,பனிப் பொழிவும் ஏற்படுகிறது.குறிப்பாகக் கல் மரப் பூங்காப் பகுதியில் அதிக அளவில்,அடுக்குப் பாறைகளால் ஆன மலைகளும் குன்றுகளும் காணப் படுகின்றன.எனவே ,பூமிக்கு அடியில் இருக்கும் பாறைகள் மேல் நோக்கி உயர்ந்ததால் ஏற்பட்ட, நில அதிர்ச்சியின் காரணமாக,அந்த மரங்கள் சாய்ந்து,மண்ணில் புதையுண்ட பிறகு,மழை நீர் கரைத்த மண்ணானது, மரங்களுக்குள் இறங்கியதால்,அந்த மரங்களானது,கல் மரங்களாகக் காலப் போக்கில் மாறி இருக்கிறது.