சனி, 8 நவம்பர், 2014

பிளேட் டெக்டானிக் தியரி தவறு.


ஒரே இனத்தைச் சேர்ந்த தரைவாழ் விலங்கின் புதை படிவங்கள், கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் கண்டங்களில் காணப் படுவதற்கு,முன் ஒரு காலத்தில், கண்டங்கள் எல்லாம் ஒன்றாக இனைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும், பின்னர் தனித் தனியாப் பிரிந்து நகர்ந்து கொண்டு இருப்பதே காரணம், என்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுநரான, டாக்டர் ஆல்பிரட் கூறிய விளக்கம் தவறு, என்பது துருவப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடற் கரையோரம் வாழ்ந்த மெசோ சாராஸ் என்று அழைக்கப் படும் ,மூன்று அடி நீளமுள்ள முதலை போன்ற ஊர்வன வகை விலங்கின் புதை படிவங்கள்,அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் அமைந்து இருக்கும் தென் அமெரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.அதன் பிறகு அதே விலங்கின் எலும்புப் புதை படிவங்கள் ,அட்லாண்டிக் பெருங் கடலுக்குக் கிழக்குப் பகுதியில் அமைந்து இருக்கும்,ஆப்பிரிக்கக் கண்டத்தில் கண்டு பிடிக்கப் பட்டது.
இதன் அடிப்படையில் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரான டாக்டர் ஆல்பிரட் வெக்னர் என்ற ஆராய்ச்சியாளர்,தரையில் வாழ்ந்த ஒரு விலங்கால் நிச்சயம் அட்லாண்டிக் பெருங் கடலைக் கடந்து இந்த இரண்டு கண்டங்களுக்கும் பரவி இருக்க இயலாது.எனவே மெசோ சாரசின் புதை படிவங்கள் தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய கண்டங்களில் காணப் படுவதற்கு,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இரண்டு கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததே காரணம் என்றும் அதன் பிறகு தனித் தனியாகப் பிரிந்து நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்திருக்கிறது என்றும் ,தொடர்ந்து நகர்ந்து கொண்டு இருக்கிறது என்றும் ஒரு விளக்கத்தைக் கூறினார்.
ஆனால் சுனாமி மற்றும் சூறாவளியால் கடல் பகுதிக்கு அடித்துக் கொண்டு வரப் பட்ட மரக் கிளைகள் மற்றும் தாவரங்களின் தொற்றிக் கொண்டு விலங்கினங்கள் ஒரு கண்டத்தில் இருந்து மற்ற கண்டங்களுக்குத் தற்செயலாகப் பரவி இருக்கலாம் என்று நம்பப் பட்டது.
இந்த நிலையில்,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் அமைந்து இருக்கும் ஸ்பிட்ஸ் பெர்ஜன் என்ற பனிமலைகள் உள்ள தீவில் வெப்ப மண்டலப் பகுதியில் வளரக் கூடிய பெரணி மற்றும் கள்ளியின்  புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
அதன் அடிப்படையில்,அந்தத் தீவானது முப்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அதிக வெப்ப நிலை நிலவும் பூமத்திய ரேகைப் பகுதியில் இருந்ததாகவும்,அதன் பிறகு வடக்கு திசையை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் வெக்னர் விளக்கம் கூறினார்.
அத்துடன் ரஷ்யாவைச் சேர்ந்த கால நிலை இயல் வல்லுனரும் தனது வருங் கால மாமனாருமான விளாடிமிர் கோப்பருடன் சேர்ந்து,ஒத்த கால நிலையில் வளரும் தாவர மற்றும் விலங்கினங்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட இடங்கள் அருகருகே இருக்குமாறு உலக வரை படத்தைப் பொருத்தினார்.
அதன் அடிப்படையில்,இருபத்தி ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு,எல்லாக் கண்டங்களும் ஒன்றாக இணைந்து ஒரே கண்டமாக இருந்ததாகவும் அந்த ஒற்றைப் பெருங் கண்டத்திற்குப பாஞ்சியா என்றும் பெயர் சூட்டினார்.
அந்தப் பாஞ்சியாக் கண்டத்தைச் சுற்றிலும் பாந்தலாசா என்ற கடல் இருந்ததாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு,பதினெட்டு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,அந்தப் பாஞ்சியாக் கண்டமானது இரண்டாகப் பிரிந்ததால்,லாரேசியா என்ற கண்டம் உருவாகி வட பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதே போன்று கோண்டுவாணா என்ற கண்டம் உருவாகி தென் பகுதியை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் டெதிஸ் என்ற கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
அதன் பிறகு வட பகுதி லாரேசியாக் கண்டமானது மறுபடியும் பிரிந்ததால்,வட அமெரிக்கக் கண்டம் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும் அதே போன்று ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள் இணைந்த,யூரேசியாக் கண்டம் உருவாகிக் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில்,வட அட்லாண்டிக் கடல் பகுதி உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
இதே போன்று தென் பகுதிக் கோண்டுவாணாக் கண்டமும் பல பகுதிகளாகப் பிரிந்ததால்,தென் அமெரிக்கக் கண்டம் உருவாகி வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து முப்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து வட அமெரிக்கக் கண்டத்துடன் இனைந்ததாகவும்,அதே போன்று ஆப்பிரிக்கக் கண்டம் உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ,மூன்று கோடி ஆணுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து ஐரோப்பாக் கண்டத்தின் தென் அப்குதியுடன் இனைந்ததாகவும்,வெக்னர் கூறினார்.
அதே போன்று,இந்தியாவும் மடகாஸ்கர் நிலப் பகுதியும் இணைந்த நிலையில்,பதினான்கு கோடி ஆண்டுகளுக்கு முன்பு,ஆப்பிரிக்கக் கண்டத்தில் இருந்து பிரிந்து வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்ததாகவும்,எட்டரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு மடகாஸ்கர் நிலப் பகுதியில் இருந்து பிரிந்த இந்தியாவானது வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து ஐந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து ஆசியக் கண்டத்தின் தென் பகுதியுடன் மோதியதால் இமய மலை உருவானதாகவும் வெக்னர் கூறினார்.
ஆனால் கடல் தரையைப் பிளந்து கோண்டு கண்டங்கள் நகர்ந்து சென்றதற்கான தடயங்கள் எதுவும் காணப் படவில்லை.
இந்த நிலையில் இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கக் கப்பல் படையில் பணியாற்றிய, டாக்டர் எட்மண்ட் ஹாரி ஹெஸ் என்ற புவியியல் பேராசிரியர்,அவரின் கப்பலில் சோனார் என்ற கருவியின் மூலம் கடலுக்குள் ஒலி அலைகளைச் செலுத்திய பிறகு அந்த அலைகள் கடல் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு எதிரொளிக்கப் பட்டு திரும்ப வரும் நேரத்தைக் கணக்கிடுவதன் மூலம் கடல் தரையில் இருந்த மேடு பள்ளங்கள் பற்றி அறிந்தார்.போர் முடிந்த பிறகும் ஹாரி ஹெஸ் தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்தார்.
அப்பொழுது அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில்,ஒரு கடலடி மலைத் தொடரானது ,வடக்கு தெற்கு திசையை நோக்கி பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நீண்டு உருவாகி இருப்பதும் அதில் பல எரிமலைகள் இருப்பதுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடரில்,அடிக்கடி நில அதிர்ச்சிகள் ஏற்படுவதும் தெரிய வந்தது.
இதன் அடிப்படையில் அவர்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் நெடுகிலும்,பூமிக்கு அடியில் இருந்து மேற்பகுதிக்கு பாறைக் குழம்பு வந்த பிறகு குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளம் பாறையாக உருவாகுவதாகவும் ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இதே போன்று மறுபடியும் அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், பூமிக்கு அடியில் இருந்து வரும் பாறைக் குழம்பானது குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளப் பாறையாக உருவாகும் பொழுது ஏற்கனவே மத்தியப் பகுதியில் உருவாகி இருந்த பழையக் கடல் தளப் பாறைகளை,கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்தி விட்டு மத்தியப் பகுதியில் புதிய கடல் தளப் பாறையாக உருவாகுவதகவும்,இதே போன்று தொடர்ந்து நடை பெறுவதால்,அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில்,புதிய கடல் தளம் தொடர்ந்து உருவாகி கிழக்கு மற்றும் எம்ற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாகவும்,அதனால் அந்தக் கடல் தளங்களுடன் அந்தக் கடலடி எரிமலைத் தொடருக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி நகர்ந்து கோண்டு இருப்பதாகவும் ஹாரி ஹெஸ் கண்டங்கள் நகர்வதற்கு ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.
இவ்வாறு கடல் தளங்களுடன் கண்டங்களும் தனித் தனிப் பாறைத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.இந்தக் கருத்தானது பிளேட் டெக்டானிக் தியரி என்று அழைக்கப் படுகிறது.
இந்தக் கருத்தின் படி,வட அமெரிக்கக் கண்டத்தின் வட பகுதியான அலாஸ்காவும்,ஆசியக் கண்டத்தின் வட பகுதியில் உள்ள சைபீரியாப் பகுதியில் உள்ள கொல்வில்லி ஆற்றுப் பகுதியும், கடந்த பத்து கோடி ஆண்டுகளுக்கும் முன்பு இருந்தே,கடுங் குளிர் நிலவும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் இருப்பதாக நம்பப் படுகிறது.
இந்த நிலையில் அலாஸ்காவிலும்,கொல்வில்லி ஆற்றுப் பகுதியிலும்,ஏழு கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்திருப்பது,அந்தப் பகுதிகளில் கண்டு பிடிக்கப் பட்ட டைனோசர்களின் புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
டைனோசர்களானது குளிர் இரத்தப் பிராணிகள் என்று அழைக்கப்படும் ஊர்வன வகை இனத்தைச் சேர்ந்த விலங்கு.ஊர்வன வகை விலங்கால் சுயமாக உடல் வெப்பத்தை உற்பத்தி செய்ய இயலாது.பாலூட்டி வகை விளங்கினங்கள் உணவைச் செரிப்பதன் மூலம்,சுயமாக வெப்பத்தை உற்பத்தி செய்த பிறகு,உடல் வெப்பத்தைப் பாது காப்பதற்காக,மயிர் போன்ற தகவமைப்புகளையும் கொண்டிருக்கின்றன.
அது மட்டுமின்றி பாலூட்டி வகை விலங்கினங்களானது குட்டிகளை ஈனுவதன் மூலம் இனப் பெருக்கம் செய்கிறது.ஆனால் டைனோசர் உள்பட ஊர்வன வகை விலங்கினங்களானது முட்டைகளை இடுவதன் மூலமே இனப் பெருக்கம் செய்கிறது.
ஊர்வன வகை விலங்கின் முட்டைகள் பொரிய வேண்டும் என்றால் அதற்குக் குறைந்த பட்சம் முப்பது சென்டி கிரேட் வெப்ப நிலை தேவை.ஆனால் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்ட அலாஸ்காவின் வட பகுதியும்,சைபீரியாவின் கொல்வில்லி ஆற்றுப் பகுதியும் அமைந்து இருக்கும் ஆர்க்டிக் வளையப் பகுதியில் ஆண்டு சராசரி வெப்ப நிலையானது பத்து முதல் இருபது சென்டிகிரேட்.
அத்துடன் பூமி தான் அச்சில் இருபத்தி மூன்றரை பாகை சாய்ந்து இருப்பதால்,துருவப் பகுதிகளளில்.ஆண்டுக்கு ஆறு மாதம் தொடர்ந்து பகலும்,ஆண்டுக்கு ஆறு மாத காலம் தொடர்ந்து இரவும் நீடிக்கிறது.இந்தக் காலமானது ஆர்க்டிக் இரவு என்று அழைக்கப் படுகிறது இந்தக் காலத்தில் வெப்ப நிலையானது தொடர்ந்து பல மாதங்கள் உறை பனிக்கும் கீழேயே இருக்கிறது.இந்த நிலையில் தாவரங்களால் தரையில் இருந்து இரையும் உறிஞ்ச இயலாது.
அதே போன்று, ஆறு மாத காலம் தொடர்ந்து இரவு நீடித்தால்,சூரிய ஒளியின்றி தாவரங்களால் ஒளிச் சேர்க்கை செய்து உணவைத் தயாரித்து உயிர் வாழ்ந்திருக்க இயலாது.
ஆனால் துருவப் பகுதிகளில் யானைக் கூட்டத்தை விட பல மடங்கு தாவரங்களை உண்ணக கூடிய டைனோசர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்ந்திருப்பது புதை படிவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
இதன் அடிப்படையில் துருவப் பகுதிகளில் எப்படி அடர்ந்த காடுகளும் டைனோசர்களும் வாழ்ந்திருக்கும் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது.
இந்தக் கேள்விகளுக்கு விடை கூறும் வண்ணம் ,புவியியல் வல்லோன்ர்களுன் உயிரியல் வல்லுனர்களும் பல்வேறு யூகங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.
குறிப்பாக டைன்சோர்கள் மட்கிய இலை தலைகளை உண்டு உயிர் பிழைத்து இருக்கலாம் அல்லது பனிக் கரடிகளைப் போன்று அறிதுயிலில் ஆழ்ந்திருக்கலாம் அல்லது பனி மான்களைப் போன்று குளிர்கால இடப் பெயர்ச்சி செய்து இருக்கலாம்  என்றெல்லாம் பல்வேறு யூகங்களை முன்வைதித்ருக்கின்றனர்.
ஆனால் இது வரை எந்த விளக்கமும் உறுதிப் படுத்தப் பட வில்லை.
இந்த நிலையில் நார்வே நாட்டுப் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்காகக் கடல் மட்டத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ள கடல் தரையைத் துளையிட்ட பொழுது கிடைத்த பாறைப் பகுதிகளில்,இருபது கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பிளேட்டியோ சாராஸ் என்று அழைக்கப் படும் தாவர உண்ணி டைனோசரின்  எலும்புப் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
எனவே டைனோசர்களின் காலத்தில் கடல் மட்டமானது தற்பொழுது இருப்பதைக் காட்டிலும் இரண்டு கிலோ மீட்டர் தாழ்வாக இருந்திருபதும்,கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் காடுகளுடன் கூடிய தரைவழித் தொடர்பு இருந்திருப்பதும் ஆதாரப்பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
இந்த நிலையில் இரண்டு கிலோ மீட்டர் ஆழமுள்ள கடல் பகுதியால் பிரிக்கப் பட்டு இருக்கும் அண்டார்க்டிக் கண்டத்திலும் மடகாஸ்கர் தீவிலும் டைனோசர்களின் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கின்றன.எனவே கடல் மட்டம் தாழ்வாக இருந்த காரணத்தால் கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடையில் இருந்த தரை வழித் தொடர்பு வழியாகவே டைனோசர்கள் உள்பட மற்ற விலங்கினங்களும் பல்வேறு கண்டங்களுக்கும் தீவுகளுக்கும் இடம் பெயர்ந்து இருக்கின்றன.

   



ஞாயிறு, 19 அக்டோபர், 2014

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது

பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சிகள் ஏற்படுகிறது





இந்த நிலையில் பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதால் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்டு இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

origo.jpg

அமெரிக்காவில் ஆரிகன் மாகாணத்தில் மூன்று சகோதரிகள் என்று அழைக்கப் படும் மூன்று எரிமலைகள் அமைந்து இருக்கின்றன.
அந்த எரிமலைப் பகுதியை எரிமலை இயல் வல்லுனர்கள் செயற்கைக் கோள் மூலம் கண்காணித்து வந்தனர்.
குறிப்பாக அந்த எரிமலைப் பகுதியின் மேல் பறந்து செல்லும் செயற்கைக் கோளில் இருந்து ரேடியோ கதிர்கள் தரையை நோக்கி அனுப்பப் பட்டது.
அவ்வாறு தரையை நோக்கி அனுப்பப் பட்ட ரேடியோ கதிர்கள் தரையில் உள்ள மேடு பள்ளங்களில் பட்டு திரும்பவும் செயற்கைக் கோளை வந்தடைந்த நேரம் துல்லியமாக பதிவு செயப் பட்டு, தரைக்கும் செயற்கைக் கோளுக்கும் இடையில் உள்ள தூரம் பதிவு செய்யப் பட்டு, தரையின் மேடு பள்ளங்கள் துல்லியமாக வரை படமாகத் தயாரிக்கப் பட்டது.

obeq.jpg
இதே போன்று தயாரிக்கப் பட்ட செயற்கைக் கோள் பதிவுகளை எரிமலை இயல் வல்லுனர்கள் வழக்கம் போல் ஆய்வு செய்த பொழுது, மூன்றாவது எரிமலைக்குத் தென் பகுதியில் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு நிலம் பத்து சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது பதிவாகி இருந்தது.
குறிப்பாக அந்த உயர்வானது 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2000 ஆண்டு அக்டோபர் மாதம் வரையிலான கால கட்டத்தில் உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த எரிமலை இயல் வல்லுனர்கள், அந்த இடத்தில் பூமிக்கு அடியில் ஏழு கிலோ மீட்டர் ஆழத்தில் இருபதாயிரம் நீச்சல் குளத்தை நிரப்பும் அளவிற்கு பாறைக் குழம்பு திரண்டு ஒரு ஏரி போல உருவாகி இருப்பதாகவும், அந்தப் பகுதியில் பாறைக் குழம்பு ஆண்டுக்கு பத்து சென்டி மீட்டர் வீதம் உயர்ந்து கொண்டு இருப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டில், அந்த மேட்டுப் பகுதியில் 3௦0 க்கும் அதிக எண்ணிக்கையில் சிறிய அளவிலான நில அதிர்ச்சிகள் ஏற்பட்டு இருப்பது பதிவு செய்யப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் உயர்வதால் நில அதிர்ச்சிகள் ஏற்படுவது ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
afinsar1
இதே போன்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள எரிமலைகளை ரேடியோ கதிர் வீச்சு முறையில் செயற்கைக் கோள் மூலம் படம் எடுக்கப் பட்ட பொழுது, எரிமலைகளைச் சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வளைய வடிவில் வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் சில சென்டி மீட்டர் உயர்ந்து இருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பு எரிமலைக்குள் நுழையும் பொழுது எரிமலையின் உயரம் அதிகரித்து எரிமலை உயரும் பொழுதும்: அதே போன்று எரிமலையில் இருந்து வாயுக்கள் வெளியறி எரிமலையின் உயரம் குறையும் பொழுதும், எரிமலையைச் சுற்றி பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு தரைப் பகுதி உயர்ந்து இறங்குவதால் எரிமலையைச் சுற்றி மேடு பள்ள வளையங்கள் உருவாகின்றன.
itainsar.jpg
இதே போன்று கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் நாள் இத்தாலி நாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு 2.8 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு வெட்டியதைப் போன்று நிலம் உயர்ந்து வளையங்கள் உருவாகி இருப்பது ரேடியோ கதிர் வீச்சு முறையில் பதிவு செய்யப் பட்ட செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் நில அதிர்ச்சி ஏற்பட்ட லா அகுய்லா நகரில் நில அதிர்ச்சி ஏற்படுவதற்கு முன்பு எரிமலைகளில் இருந்து வெளியேறும் ரேடான் என்ற கதிரியக்கத் தன்மையுள்ள வாயு வெளிப் பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
எனவே பூமிக்கு அடியில் இருக்கும் எரிமலைகள் வெடித்ததால் இத்தாலியில் நில அதிர்ச்சி ஏற்பட்டு இருப்பது செயற்கைக் கோள் பதிவுகள் மூலமாகவும் ரேடான் வாயுக் கசிவு மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.
haitialos.jpg
இதே போன்று கடந்த 2010 ஆம் ஆண்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டு சுனாமி உருவான பொழுதும் நில அதிர்ச்சி மையத்தைச் சுற்றிலும் இருபது கிலோ மீட்டர் சுற்றளவிற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் 35 சென்டி மீட்டர் உயரத்துடன் உருவாகி இருந்தது, தரை மட்ட மாறு பாடுகளைப் பதிவு செய்த ஜப்பான் நாட்டின் ஆலோஸ் என்ற செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதே போன்று கடந்த 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஹோண்சு தீவில் நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்பட்ட பொழுதும், நில அதிர்ச்சி மையத்தை சுற்றிலும் பல கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 50 சென்டி மீட்டர் உயரத்திற்கு வரப்பு போன்ற வளைய வடிவ மேடுகள் உருவாகி இருப்பதும், ஐரோப்பாவின் என்விசாட் செயற்கைக் கோள் மூலம் எடுக்கப் பட்ட தரைமட்ட மாறு பாட்டுப் படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
எனவே பூமிக்கு அடியில் எரிமலைகள் வெடிப்பதாலேயே நில அதிர்ச்சியும் சுனாமியும் ஏற்படுகிறது.

கடல் தரையும் கண்டங்களும் நிலையாக இருக்கின்றன.

( இந்தியா ஆசிய கண்டங்களின் மோதியதால் அந்தக் கண்டங்களுக்கு இடையில் இருந்த கடலடித் தரையானது புடைத்துக் கொண்டு மலைகளாக  உயர்ந்ததால்தான் தற்பொழுது மலைகளின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுகின்றன என்று நம்பப் பட்ட நிலையில்,அந்தக் கண்டங்கள் தீவுக் கண்டங்களாக இருந்ததாக நம்பப் பட்ட காலத்தில் வாழ்ந்த திமிங்கிலத்தின் புதை படிவங்கள், இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டது இதன் அடிப்படையில்,நிலத்தின் மேல் கடல் உயிரினங்களின் புதை படிவங்கள் காணப் படுவதற்கு புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கங்கள் பொருத்தமற்றது என்று தெரிய வந்தது.)
convection1.gif
இதே போன்று கண்டங்கள் எல்லாம் கண்டங்களைச் சுற்றியுள்ள கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு கண்டங்களும் கடல் தளமும் நகர்ந்து அவற்றின் ஓரப் பகுதிகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்பட்டுவதாக புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும், அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து என்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.
atlasep.jpg
atlasep.jpg
குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்கள் எல்லாம் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

ஆதாவது அட்லாண்டிக் பெருங் கடலுக்கு மேற்குப் பகுதியில் உள்ள வட அமெரிக்கக் கண்டமானது, மேற்கு திசையை நோக்கியும், அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் யூரேசியக் கண்டமானது, அதாவது ஐரோப்பா மற்றும் ஆசியக் கண்டங்கள், கிழக்கு திசையை நோக்கியும் நாகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இவ்வாறு அட்லாண்டிக் பெருங் இருபுறமும் உள்ள கண்டங்கள் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதற்கு, அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் , அதனால் அந்தக் கடல் தளத்,துடன் அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இருபுறமும் உள்ள கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகிக் கொண்டு இருப்பதாக நம்பும் புவியியல் வல்லுனர்கள் அதற்கு ஒரு விளக்கமும் கூறுகின்றனர்.

குறிப்பாக அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் பூமியின் வடதுருவப் பகுதியில் இருந்து தெற்கே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதி வரை ஒரு கடலடி எரிமலைத் தொடர் உருவாகி இருக்கிறது.

அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் அடிக்கடி எரிமலைச் சீற்றமும் நில அதிர்ச்சிகளும் ஏற்படுகிறது.

அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில் பூமிக்கு அடியில் இருக்கும் வெப்பமான பாறைக் குழம்பானது, மேற்பரப்புக்கு வந்து குளிர்ந்து இறுகிப் புதிய கடல் தளமாக உருவாகுவதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகின்றனர்.

இதே போன்று மறுபடியும் அதே பகுதிக்கு பாறைக் குழம்பானது வருவதாகவும்,  அப்பொழுது ஏற்கனவே அப்பகுதியில் உருவாகி இருந்த கடல் தளப் பாறைகளை மத்தியப் பகுதியில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு என எதிரெதிர் திசைகளை நோக்கி பக்க வாட்டாக நகர்த்தி விட்டு, மத்தியப் பகுதியில் புதிய கடல் தளமாக உருவாகுவதாகவும் புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.

இதே போன்று அந்தக் கடலடி எரிமலைத் தொடர் பகுதி நெடுகிலும் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளத்துடன் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் நம்புகிறார்கள்.
unde13.gif
unde13.gif
குறிப்பாக வட அட்லாண்டிக் கடல் பகுதியில் புதிய கடல் தளம் உருவாகி மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வடகோளப் பகுதியில் உள்ள வட அமெரிக்கா மற்றும் உரேசியாக் கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும் நம்பப் படுகிறது.

ஆனால் அட்லாண்டிக் கடலின் தென் பகுதியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், புதிய கடல் தளமானது தொடர்ந்து உருவாகி முறையே வடமேற்கு மற்றும் வடகிழக்கு என இரு வேறு திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இதில் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்று கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

ஆனால் இந்தக் கருத்தானது மிகவும் தவறான கருத்து.

எப்படியென்றால் ஆப்பிரிக்கக் கண்டத்தின் வடபகுதியானது வடகோளப் பகுதியிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது பூமியின் தென்கோளப் பகுதியிலும் அமைந்து இருக்கிறது.

எனவே ஒரு கண்டம் ஒரே நேரத்தில் இரண்டு திசைகளை நோக்கி, அதாவது கிழக்கு திசையை நோக்கியும், வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
hspot.png
hspot.png
புவியியல் வல்லுனர்களின் கருத்து தவறு என்பதற்கு அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேலும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும் உறுதியாகியுள்ளது.

குறிப்பாக கடல் தளமும் கண்டங்களும் பத்து முதல் நாற்பது கிலோ மீட்டர் ஆழம் வரைக்கும் பாறைகளால் ஆனது.இந்த நிலையில் பூமிக்கு அடியில் இருக்கும் பாறைக் குழம்பால் துளைக்கப் பட்டு கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் எரிமலைத் தொடர்கள் உருவாகி இருக்கின்றன.

இந்த நிலையில் உண்மையில் கடல் தளமும் கண்டங்களும் நகர்ந்து கொண்டு இருந்தால், கடல் தளத்தின் மேலும் கண்டங்களின் மேலும் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்களானது, ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து ஆப்பிரிக்கக் கண்டப் பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கானரி எரிமலைத் தொடரும், கேமரூன் எரிமலைத் தொடரும், ஒன்றுக் கொன்று இணையாக உருவாகாமல், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.
evi2.jpg
evi2.jpg
புவியியல் வல்லுனர்களின் கருத்துப் படி, ஆப்பிரிக்கக் கண்டமானது  அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து உருவாகி, கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், ஆப்பிரிக்கக் கண்டமானது கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் அட்லாண்டிக் கடலின் வடபகுதியில், ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டி அமைந்து இருக்கும் அட்லாண்டிக் கடல் தளத்தின் மேல், கானரித் தீவுகள் என்று அழைக்கப் படும் எரிமலைத் தீவுகளானது, கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.

அத்துடன் கானரி எரிமலைத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள எரிமலைத் தீவுகளானது, அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலும், கிழக்கு கோடியில் உள்ள எரிமலைத் தீவுகளானது, ஆப்பிரிக்கக் கண்டத் திட்டின் மேலும் உருவாகி இருக்கிறது.

எனவே கானரி எரிமலைத் தீவு அமைப்பின் படி, அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும், மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.

ஆனால் தென் கோளப் பகுதியில் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் தொடர்ந்து புதிய கடல் தளமானது உருவாகி, முறையே வடமேற்கு மற்றும் வடகிழக்கு என இருவேறு திசைகளை நோக்கி கடல்தளமனது விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் தென் அமெரிக்கக் கண்டமானது வடமேற்கு திசையை நோக்கியும், அதே போன்று வட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் ஆப்பிரிக்கக் கண்டமானது வடகிழக்கு திசையை நோக்கியும், நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.
cameroonline.jpg
cameroonline.jpg
இந்த நிலையில் தென் கோளப் பகுதியில், ஆப்பிரிக்கக் கண்டத்தையொட்டியுள்ள அட்லாண்டிக் கடல் தளத்தின் மேலிருந்து ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்பகுதி வரை தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் கேமரூன் எரிமலைத் தொடரானது தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி உருவாகி இருக்கிறது.

எனவே, தென் கோளப் பகுதியில் கேமரூன் எரிமலைத் தீவின் அமைப்புப் படி அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும் தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.

இதன் படி தென் கோளப் பகுதியில் அட்லாண்டிக் கடல் தளமும் ஆப்பிரிக்கக் கண்டமும், தென் மேற்கு திசையில் இருந்து வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக அமைகிறது.

எனவே எப்படி ஆப்பிரிக்கக் கண்டத்தின் வட பகுதியானது அட்லாண்டிக் கடல் தளத்துடன் மேற்கு திசையில் இருந்து கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கும் நிலையில்,அதே ஆப்பிரிக்கக் கண்டத்தின் தென் பகுதியானது அட்லாண்டிக்  கடல் தளத்துடன் தென் மேற்கு திசையில் இருந்து  வடகிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருக்க முடியும் ? என்ற கேள்வி எழுகிறது.

நிச்சயம் ஒரு கண்டத்தின் வட பகுதியானது கிழக்கு திசையை நோக்கியும் அதே கண்டத்தின் தென் பகுதியானது வடகிழக்கு திசையை நோக்கியும் நகர்ந்து கொண்டு இருக்க முடியாது.
இதே போன்று வடஅமெரிக்கக் கண்டமானது ,அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன் மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படுகிறது.

இந்த நிலையில் வட அமெரிக்கக் கண்டத்தின், வடமேற்குப் பகுதியில் அருகருகே உருவாகி இருக்கும் ஒரே கால கட்டத்தைச் சேர்ந்த ,அனாகிம் எரிமலைத் தொடரும்,ஸ்டிக்கைன் எரிமலைத் தொடரும், வெல்ஸ் கிரே எரிமலைத் தொடரும் ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கின்றன.

உண்மையில் வட அமெரிக்கக் கண்டம் நகர்ந்து கொண்டு இருந்தால் இந்த எரிமலைத் தொடர்கள் எல்லாம் ஒன்றுக் கொன்று இணையாக உருவாகி இருக்க வேண்டும்.

ஆனால் அவ்வாறில்லாமல் வட அமெரிக்கக் கண்டத்தின் மேல் ஒன்று கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமும், வட அமெரிக்கக் கண்டமும், அட்லாண்டிக் கடல் தளமும், நிலையாக ஓரிடத்தில இருப்பது நிரூபணமாகியுள்ளது.

எனவே அட்லாண்டிக் கடலுக்கு அடியில் இருக்கும் கடலடி எரிமலைத் தொடர் பகுதியில், தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி, எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும், எதிரெதிர் திசைகளை நோக்கி, விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகப் புவியியல் வல்லுனர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து என்பது ஆதார பூர்வமாக நிரூபணமாகியுள்ளது.
1circle
1circle
இதே போன்று கண்டங்கள் எல்லாம் கடல் தளத்துடன் கண்டத் தட்டுகளாக நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அவ்வாறு நகரும் பொழுது, பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்படுவதால்தான், நில அதிர்ச்சிகள் ஏற்படுவதாகவும், புவியியல் வல்லுனர்கள் கூறும் விளக்கமும் கூட, அடிப்படை ஆதாரமற்ற தவறான கருத்து, என்பதும் ஆதாரபூர்வமாகத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக கடந்த 1963 ஆம் ஆண்டில் இருந்து 1998 ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தி ஐந்து ஆண்டு கால கட்டத்தில் ,உலகெங்கும் ஏற்பட்ட 3,58,214  நில அதிர்ச்சிகள் நிகழ்ந்த இடங்களைக் குறித்து நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் வரைபடம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டனர்.

அந்த உலக அளவிலான நில அதிர்ச்சி வரைபடத்தில்,அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் வட அமெரிக்கக் கண்டத்திற்கும்,அதே போன்று அட்லாண்டிக் பெருங் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளத்துடன், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும், இடையில் உள்ள கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை உரசல் ஏற்பட்டு அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் இருந்து, அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதி வரை, தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், உலக அளவிலான நில அதிர்ச்சி வரை படத்தில் பதிவாகி இருக்க வில்லை.

இவ்வாறு வட அட்லாண்டிக் மற்றும் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதிகளுக்கு இடையில் தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள் ஏற்படாததன் அடிப்படையில் அட்லாண்டிக் கடல் தளமானது தொடர்ச்சியாக இருப்பதுடன், கடல் தளமும் கண்டங்களும் நிலையாக ஓரிடத்தில் இருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

எனவே அட்லாண்டிக் பெருங் கடலுக்கு அடியில் தொடர்ந்து புதிய கடல் தளம் உருவாகி எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் அந்தக் கடல் தளங்களுடன், கண்டங்களும் எதிரெதிர் திசைகளை நோக்கி விலகி நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் விளக்கமானது  அடிப்படை ஆதாரமற்ற விளக்கம் என்பது, உலக அளவில்லான நில அதிர்ச்சி வரைபடம் மூலமாகவும் நிரூபணமாகியுள்ளது.

இவ்வாறு கடல் தளத்தின் மேலும், கண்டங்களின் மேலும், ஒன்றுக் கொன்று இணையற்ற முறையில் உருவாகி இருக்கும் எரிமலைத் தொடர்கள் மூலமாகவும்,அதே போன்று கண்டங்களுக்கு இடையில் உள்ள, கடல் தளப் பகுதியில், தொடர்ச்சியாக நில அதிர்ச்சிகள், ஏற்படாததன் அடிப்படையிலும், கடல் தளமும், கண்டங்களும் நிலையாக இருப்பது ஆணித் தரமாக நிரூபணமாகியுள்ளது.
caribusgs
caribusgs
இவ்வாறு அட்லாண்டிக் கடல் தளமும் அட்லாண்டிக் கடலுக்கு இரு புறமும் உள்ள கண்டங்களும் நிலையாக இருக்கும் நிலையில், அமெரிக்கக் கண்டங்களானது கடல் தளத்துடன் நகர்ந்து கொண்டு இருப்பதாக தவறான கருத்தை நம்புவதால்,வட அமெரிக்கக் கண்டத்திற்கும் தென் அமெரிக்கக் கண்டத்திற்கும் இடைப் பட்ட கடல் பகுதியில் அமைந்து இருக்கும் கரீபியன் எரிமலைத் தீவுக் கூட்டத்தில் உள்ள ஹைத்தி தீவில், கடந்த 12.01.2010 அன்று கடுமையான நில அதிர்ச்சியும், சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டதற்கு, உண்மையான விளக்கத்தைக் கூற இயலாமல்,அமெரிக்க அரசின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் ஒரு அரைகுறையான அறிக்கையை வெளியிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக ஹைத்தி தீவு நில அதிர்ச்சி குறித்த, அமெரிக்க அரசின் புவியியல் கழகத்தைச் சேர்ந்த வல்லுனர்கள் வெளியிட்ட அறிக்கையில் ‘’ஹைத்தி தீவானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும்,அதனால் வட அமெரிக்கக் கண்டத் தட்டுக்கும் கரீபியன் தீவு பாறைத் தட்டுக்கும் இடையில் ஏற்பட்ட உரசலால் நில அதிர்ச்சி ஏற்பட்டதாகவும் ’’ தெரிவிக்கப் பட்டு இருக்கிறது.

முக்கியமாக அந்த அறிக்கையில் ஹைத்தி தீவானது நகர்ந்து கொண்டு இருக்கிறதா?எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று தெரிவிக்கப் படவே இல்லை.

ஏனென்றால் உண்மையில் ஹைத்தி தீவு அமைந்து இருக்கும் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்று அமெரிக்க நாட்டின் புவியியல் கழக வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.

ஏனென்றால் அமெரிக்க நாட்டின் புவியியல் கழக வல்லுனர்கள்,வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய இரண்டு கண்டங்களும் அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் உருவாகி, முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக நம்பப் படும் கடல் தளங்களுடன், முறையே மேற்கு மற்றும் வடமேற்கு ஆகிய திசைகளை நோக்கி நகர்ந்து தற்பொழுது உள்ள இடங்களுக்கு வந்து சேர்ந்ததாக நம்புகிறார்கள்.

இந்த நிலையில் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இருக்கும் கரீபியன் எரிமலைத் தீவுக் கூட்டம் எப்படி உருவாகியது?நகர்ந்து கொண்டு இருக்கிறதா? என்ற கேள்விகளுக்கு அமெரிக்க அரசின் கழக வல்லுனர்களுக்குத் தெரிய வில்லை.
carib90.jpg
carib90.jpg
சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு பசிபிக் கடல் பகுதியில் எரிமலைச் செயல் பாட்டால் உருவாகியதாகவும்,பின்னர் அந்தத் தீவுக் கூட்டமே ஒரு தனிப் பாறைத் தட்டாக உருவாகி வட கிழக்கு திசையை நோக்கி வளைவான பாதையில் நகர்ந்து கொண்டு இருந்ததாகவும்,அப்பொழுது எதிர் திசையில், வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்கள் முறையே மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டு இருந்ததாகவும், அப்பொழுது அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் தற்பொழுது இருக்கும் பனாமா, ஹோண்டுராஸ், நிகரகுவா, போன்ற நாடுகள் அமைந்து இருக்கும், மத்திய அமெரிக்க நிலப் பகுதிகள் உருவாகி இருக்க வில்லை என்றும், அதனால் இந்த இரண்டு கண்டங்களுக்கும் இடையில் இடைவெளி இருந்ததாகவும், அந்த இடை வெளிக்குள் கரீபியன் தீவுக் கூட்டமானது நுழைந்து தற்பொழுது உள்ள இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும், இன்றும் கூட கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதகவும் பல ஆண்டுகளாக நம்பிக் கொண்டு இருந்தார்கள்.

இந்த நிலையில் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் பாலம் போன்ற மத்திய அமெரிக்க நிலப் பகுதியில், பதினாறு கோடி ஆண்டுகள் தொன்மையான தாவரங்களின் புதை படிவங்கள் இருப்பது கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

எனவே ஒன்பது கோடி ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் இடைவெளி இருந்ததாக நம்புவதற்கு ஆதாரம் இல்லை.

அதே போன்று கரீபியன் தீவுக் கூட்டத்தில் உள்ள கியூபாவில் பதினைந்து கோடி ஆண்டுகள் தொன்மையான டைனோசரின் எலும்புப் புதைப் படிவங்கள் இருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டு உள்ளது.

எனவே கியூபா தீவானது பதினைந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பே தற்பொழுது இருக்கும் இடத்திலேயே இருந்திருப்பதும்,அதனால் அமெரிக்கக் கண்டங்களில் இருந்து கியூபாவுக்கு டைனோசர்கள் வந்து இருப்பதும்,ஆதாரபூர்வமாக நிரூபணமாகியுள்ளது.

இது போன்ற கண்டு பிடிப்புகளால், பல புவியியல் வல்லுனர்கள், கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து விட்டதாகக் கூறப் படும் விளக்கத்தை ஏற்கத் தயங்குகின்றனர்.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியிலேயே எங்காவது உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தற்பொழுது இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்து இருக்கலாம், என்றும்,கரீபியன் தீவுக் கூட்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கலாம், என்றும் நம்புகின்றனர்.

இன்னும் சில புவியியல் வல்லுனர்கள் கரீபியன் தீவுக் கூட்டமானது தற்பொழுது இருக்கும் இடத்திலேயே உருவாகி இருக்கலாம் என்றும் நம்புகின்றனர்.அப்படியென்றால் கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருக்கிறதா?ஏன் நகர வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு இந்தக் கருத்தில் பதில் கூற இயலவில்லை.
cavofo.jpg
cavofo.jpg
குறிப்பாக கரீபியன் தீவுக் கூட்டத்தில் கிழக்குப் பகுதியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி வளைவான பாதையில் எரிமலைகள் உருவாகி இருக்கின்றன.

இதற்கு கரீபியன் தீவுக் கூட்டமானது பசிபிக் கடல் பகுதியில் உருவாகி கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், இந்த நிலையில் மேற்கு திசையை நோக்கி  நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும், அட்லாண்டிக் கடல் தளமானது கரீபியன் பாறைத் தட்டுக்கு அடியில் சென்று உருகிப் பாறைக் குழம்பாக்கி மறுபடியும் மேல் நோக்கி உயர்ந்து கடல்தரைக்கு மேலே எரிமலைகளாக உருவாகி இருக்கின்றன என்று விளக்கம் கூறப் படுகிறது.

ஆனால் கரீபியன் தீவுக் கூட்டமானது அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவாகி மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாக விளக்கம் கூறும்  புவியியல் வல்லுனர்களால்,அந்த எரிமலைகள் எப்படி உருவானது? என்ற கேள்விக்கு விளக்கம் கூற இயல வில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டம் எங்கே எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது? என்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எந்த ஒரு புவியியல் வல்லுராலும் உறுதியாகக்  கூற இயலவில்லை.

எனவே கரீபியன் தீவுக் கூட்டமானது, பசிபிக் கடல் பகுதியில் உருவாகி அமெரிக்கக் கண்டங்களுக்கு இடையில் நுழைந்து, கிழக்கு திசையை நகர்ந்து கொண்டு இருப்பதாக கூறப் படும் கருத்தின் அடிப்படையில்,கரீபியன் தீவுக் கூட்டமானது கிழக்கு திசையில் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறினால், அது தொடர்பாக எழும் கேள்விகளுக்கு விடை தெரியாத நிலையில் அமெரிக்க அரசின் புவியியல் வல்லுனர்கள் இருப்பதால்,நேரடியாக கரீபியன் தீவுக் கூட்டம் நகர்ந்து கொண்டு இருப்பதாகக் கூறாமல்,வட அமெரிக்கக் கண்டமானது மேற்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் கரீபியன் தீவுக் கூட்டமானது வட அமெரிக்கக் கண்டத்தைப் பொறுத்த மட்டில் கிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதனால் பாறைத் தட்டுகளுக்கு இடையில் உரசல் ஏற்பட்டு ஹைத்தி தீவில் நில அதிர்ச்சி ஏற்பட்டதாக அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்கள்.

அதாவது கரீபியன் தீவுக் கூட்டம் எப்படி உருவாகியது? எந்தத் திசையை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது என்று உண்மையில் விடை தெரியாத நிலையிலேலே ஹைத்தி தீவு நில அதிர்ச்சிக்கு அமெரிக்க அரசின் புவியியல் கழக வல்லுனர்கள் இப்படி ஒரு விளக்கத்தைத் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே உண்மையில் அமெரிக்கக் அரசின் புவியியல் வல்லுனர்களுக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் என்ன நடக்கிறது என்று தெரிய வில்லை என்பதையே அவர்களின் அறிக்கை மூலம் தெளிவாகத் தெரிகிறது.

இதே போன்று கடந்த 26.12.2004  அன்று இந்தோனேசியாவில் சுமத்ரா தீவுப் பகுதியில் ஏற்பட்ட நில அதிர்ச்சிக்கும் சுனாமிக்கும் கூட நாசா வெளியிட்ட அறிக்கையிலும் நாசாவைச் சேர்ந்த புவியியல் வல்லுனர்கள் முன்னுக்குப் பின் முரணான விளக்கங்களைத் தெரிவித்து தங்களின் அறியாமையை வெளிப்படுத்தி இருப்பதும் தெரிய வந்துள்ளது.

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து நத்தைகள் தீவுகளுக்கு எப்படிச் சென்றது ?

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து நத்தைகள் தீவுகளுக்கு எப்படிச் சென்றது ?






ஐரோப்பாக் கண்டத்தில் பேலியா பெர்வர்சா என்று அழைக்கப் படும் இனத்தைச் சேர்ந்த நத்தைகள் காணப் படுகின்றன.இந்த நத்தைகளுக்கு உப்பு நீர் ஒத்தக் கொள்ளாது என்பதுடன் இந்த நத்தைகளால் கடல் நீரில் உயிர் வாழவும் இயலாது.
இந்த நிலையில் 1824 ஆம் ஆண்டு ஜான் கிரே என்ற உயிரியல் வல்லுநர்,தெற்கு அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் ட்ரிடான் ட குன்கா என்ற எரிமலைத் தீவில் சில நத்தைகளைக் கண்டார்.
அந்த நத்தைகள் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகளைப் போலவே இருந்தது, ஆனால் அளவில் கொஞ்சம் பெரியதாக இருந்தது.
ட்ரிடான் ட குன்கா தீவானது ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து எட்டாயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருகிறது. எனவே அவ்வளவு தொலைவு கடல் பகுதியைக் கடந்து பேலியா பெர்வர்சா நத்தைகள், ஐரோப்பாவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு வந்து இருக்க இயலாது, என்ற அடிப்படையில், ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் பட்ட நத்தைகள், புதிய இனமாகக் கருதப் பட்டு ,ட்ரிடானியா என்று பெயர் சூட்டப் பட்டது.
இந்த நிலையில் நெதர் லாந்து நாட்டின் லெய்டன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுநர் ,டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் குழுவினர் ஐரோப்பாக் கண்டத்தில் காணப் படும் பேலியா பெர்வர்சா நத்தைகள் மற்றும் ஐரோப்பாவில் இருந்து ஆயிரத்தி ஐநூறு கிலோ மீட்டர் தொலைவில்,வட அட்லாண்டிக் கடலின் மத்தியப் பகுதியில் அமைந்து இருக்கும் அசோர் என்ற எரிமலைத் தீவு,அதே போன்று ,அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா எரிமலைத் தீவு ,அதே போன்று அசோர் எரிமலைத் தீவில் இருந்து ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் ட்ரிடான் எரிமலைத் தீவிலும் காணப் படும் நத்தைகளின் மரபணுக்களைச் சேகரித்து ஒப்பாய்வு செய்தனர்.
அந்த ஆய்வில் அசோர் தீவு நத்தைகள் ஐரோப்பாவில் காணப் படும் நத்தைகளின் வழித் தோன்றல்கள் என்பதும்.ஐரோப்பாவில் இருந்து அசோர் தீவுக்கு வந்த நத்தைகள் காலப் போக்கில் இரண்டு புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
அதே போன்று ட்ரிடான் ட குன்கா தீவில் காணப் படும் எட்டு வகையான நத்தைகளின் மூததையானது ட்ரிடான் ட குன்கா தீவில் இருந்து ஒண்பதாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் அசோர் தீவில் காணப் படும் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதே போன்று அசோர் தீவில் இருந்து ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் மதீரா தீவில் காணப் படும் நத்தைகளின் மூததையும் அசோர் தீவு நத்தைகள் என்பது தெரிய வந்தது.



இந்த நிலையில் ஐரோப்பாவில் காணப் படும் சில பேலியா நத்தைகள் நத்தைகளின் மூததையானது மதீரா தீவின் நத்தைகள் என்பதும் தெரிய வந்தது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து அசோர்,ட்ரிடான் ட குன்கா,மற்றும் மதீரா ஆகிய தீவுகளுக்கு நத்தைகள் பரவிய பிறகு புதிய இன வகைகளாக பரிணாம வளர்ச்சி அடைந்து இருப்பதாகவும் அதே போன்று மதீரா தீவில் இருந்து புறப்பட்ட இடமான ஐரோப்பாக் கண்டத்துக்கு வந்த பிறகும் புதிய இனவகையாக உருவாகி இருப்பதும் தெரிய வந்தது.
ஆனால் நத்தைகள் எப்படி பல்லாயிரம் கிலோ மீட்டர் கடல் பகுதியைக் கடந்து எரிமலைத் தீவுகளுக்கு சென்றன ? என்ற கேள்வி எழுந்தது.
பொதுவாகத தீவுகளில் விலங்கினங்கள் காணப் படுவதற்கு,அந்த விலங்குகள் கடலில் மிதந்து வந்த தாவரங்கள் மேல் இருந்த படி பல நாட்கள் கடலில் மிதந்த படி தீவுகளில் கரையொதுங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது.ஆனால் தரை வாழ் நத்தைகளுக்கு கடல் நீர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அந்த விளக்கம் நிபுணர்களால் நிராகரிக்கப் பட்டு விட்டது.
விஞ்ஞானி சார்லஸ் டார்வினும் இதே போன்று நத்தைகள் உலகின் பல பகுதிகளுக்கு எப்படி பரவி இருக்கும்? என்பது பற்றிய ஆராய்ச்சியில் ஈடு பட்டார்.அவர் சில நத்தைகளைக் கடல் நீரில் அமிழ்த்தியும் சோதனை செய்தார்.அவர் நத்தைகளால் இரண்டு வார காலத்துக்கு மேல் கடலில் ஊயிர் வாழ இயலாது என்றும் கருதினார்.
அத்துடன் அவர் நத்தைகள் பறவைகளின் காலில் ஒட்டிக் கொண்டு கடல் பகுதியைக் கடந்து இருக்கலாம் என்று நம்பினார்.
டாக்டர் ரிச்சர்ட் பிரீஸ் அவர்களும், பேலியா நத்தைகள் பறவைகளின் உடலில் ஒட்டிக் கொண்டு ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து மற்ற தீவுகளுக்கும்,பிறகு தீவில் இருந்து ஐரோப்பாக் கண்டதுக்கும் வந்திருக்கலாம் என்று நம்புகிறார்.
ஆனால் பறவைகள் நத்தைகளை உண்ணக கூடியவை என்றாலும் எப்படியோ சில நத்தைகள் பறவையின் இறக்கையில் ஒட்டிக் கொண்டு தீவுகளுக்கு வந்திருக்கலாம் என்றும் நம்புகிறார்.
ஆனால் அசோர் மற்றும் ட்ரிடான் ட குன்கா ஆகிய இரண்டு தீவுகளும்,அட்லாண்டிக் கடலுக்கு அடியில் வடக்கு தெற்கு திசையை நோக்கி நீண்டு இருக்கும் கடலடி எரிமலைத் தொடரில் உள்ள எரிமலைகளின் உச்சிப் பகுதி ஆகும்.
தற்பொழுது அந்த கடலடி எரிமலைத் தொடரானது பதினாறாயிரம் அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் இருந்து எட்டாயிரம் அடி உயரத்துக்கு எழுந்து இருக்கின்றன.
ஆனாலும் அந்த எரிமலைத் தொடரானது தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில் நார்வே நாட்டுக் கடல் பகுதியில் ,கடல் மட்டத்தில் இருந்து ஏழாயிரத்தி நானூறு அடி ஆழத்தில் உள்ள கடல் தளத்தில் டைனோசரின் எலும்புப் புதை படிவங்கள் கண்டு பிடிக்கப் பட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு கடல் மட்டம் ஏழாயிரம் அடி தாழ்வாக இருந்திருந்தால் ,தற்பொழுது கடல் மட்டத்தில் இருந்து ஆறாயிரம் அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கும் மத்திய அட்லாண்டிக் கடலடி எரிமலைத் தொடரானது, கடல் மட்டத்துக்கு மேலாக ஆயிரத்தி நானூறு அடி உயரத்தில் இருந்து இருக்கும்.
எனவே அந்த எரிமலைத் தொடர் வழியாக அசோர் தீவில் இருந்து ட்ரிடான் ட குன்கா தீவுக்கு நத்தைகள் எளிதாக வந்து சேர்ந்து இருக்க முடியும்.

எனவே கடல் பகுதியை எளிதில் கடக்க இயலாத நத்தைகள் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கும் எரிமலைத் தீவுகளில் காணப் படுவதன் மூலம் கடல் மட்டம் தாழ்வாக இருந்து இருப்பது உறுதியாகிறது.